செம்மணி இனப்படுகொலைக்கு கனேடிய தமிழ் அரசியல்வாதிகள் ஆதரவா?: நீதன் ஷானைத் தவிர ஏனையோர் எங்கே? – வாக்களித்த கனேடியர்கள் கேள்வி!

செம்மணி இனப்படுகொலைக்கு நீதி கோரி BEHIND ME MEDIA நடாத்திய போராட்டத்தில் கனேடிய தமிழ் அரசியல்வாதிகளில் நீதன் ஷானை ஒருவரைத் தவிர ஏனைய கனேடிய தமிழ் அரசியல்வாதிகள் ஏன் இணைய மறுத்தார்கள்? அவர்கள் செம்மணி இனப்படுகொலைக்கு ஆதரவா? என வாக்களித்து கனேடிய பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நேற்று ஆகஸ்ட் 30 ஆம் திகதி
BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் கனடா ALBERT CAMPBELL SQUARE இல் நடைபெற்றது.

காணாமற் போன எம் உறவுகள் குறித்த உண்மைகள் வெளிவரவேண்டும் என்ற எம்மினத்தின் ஆறாத வலிகள், தேடல்கள், காத்திருப்புக்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மௌனித்த வார்த்தைகள்… என எல்லாவற்றுக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாகப் பதிலைப் பெறுவதற்கு நேற்றுக் கூடிய நிகழ்வில் உங்களுக்காகக் குரல் கொடுக்க எங்களைத் தலைவராக்குங்கள் என வாக்குறுதிகளை வழங்கி -தமிழ் மக்களுக்காக கனேடிய அரசியல் அரங்கத்துக்குள் சென்ற தமிழ்த் தலைமைகள் எங்கே என்ற கேள்வி Behind Me Mediaவின் நிறுவனரும் தலைவருமான கணா செல்வா ஏற்புரை வழங்கிக் கொண்டிருக்கும் போது பொது மக்களால் கேட்கப்பட்டது.

இதே அவலங்கள் எமக்கு வரக் கூடாதென்று தானே நாட்டை விட்டு ஓடி வந்தோம். இந்த அவலங்களைக் காட்டித்தானே புலத்தில் குடியுரிமைகளை கண்ணீர் விட்டுப் பெற்றுக் கொண்டோம். அந்த நன்றியை கனேடிய தமிழ் அரசியல் பிரமுகர்கள் எப்படி மறக்கலாம்?

ஒரு சில அமைப்புகளைத் தவிர ஏனைய கனேடிய தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை பல்வேறு விதமாக வழிகளில் அழைக்கப்பட்டும் சமூகமளிக்கவில்லை என்பது தற்போது கனேடிய மண்ணில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பேசுபெருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியிலான ஆதரவுக் குரல்களோடு நடைபெற்ற மேற்படி விழித்தெழு தமிழா! நிகழ்வில் செம்மணி மனிதப் புதைகுழிப் பேரவலமே எம்மினத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைக்கான சாட்சியாக உள்ளதை கனேடிய தமிழ் அரசியல் தலைமைகள் மறந்தது எப்படி என்ற கேள்விக்கான பதிலைக் கொடுக்க வேண்டியது நிகழ்வில் சமூகமளிக்கத் தவறிய ஒவ்வொருவரதும் கடமை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

செம்மணியில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை மீட்கப்பட்ட கைக் குழந்தைகள் உட்பட்ட சகல வயதுகளையும் சேர்ந்த 583 மனித எலும்புக் கூடுகளுக்குமாக அரை மணி நேரத்தைக் கூட ஒதுக்க முடியத கையாலாகாத மனிதர்களாக நாம் ஏன் வாழ வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதிலை யார் வழங்குவார்கள்? போன்ற வலி மிகுந்த கேள்விகளை எமது ஊடக அலுவலகத்திற்கு வரும் அழைப்புக்கள் பெருமளவில் தாங்கி வந்து கொண்டிருப்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம்.

 

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை