சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும்! – கனேடிய நாடாளுமன்றில் லோகன் கணபதி

கனேடிய நாடாளுமன்றில் Progressive Conservative Party இன் உறுப்பினர் லோகன் கணபதி டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தனது பதிவினை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது உரையில் நவம்பர் 28ஆம் திகதி இலங்கைத் தீவை அழித்து நினைத்துப் பார்க்க முடியா இழப்பை ஏற்படுத்திய மிகவும் கொடிய சூறாவளியான டிட்வாவைப் பற்றிப் பேச இன்று நான் கனத்த இதயத்துடன் எழுந்திருக்கின்றேன். இது 2004 சுனாமியை விட மோசமானது. 600இற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றார்கள். 190 பேர் காணாமற்போயுள்ளனர். 500,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

மேலும் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் மலைநாட்டுப் பகுதிகள் குறிப்பாகக் கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்கள் நிலச்சரிவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சில கிராமங்கள் மண்சரிவினால் முழுமையாக மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளன.
அது மாத்திரமன்றி புத்தளம், கம்பஹா, மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களையும் கடுமையான வெள்ளம் பாதித்தது. வீடுகள் அழிக்கப்பட்டன. மேலும் பல மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒன்ராறியோவில் 400,000 இற்கு மேற்பட்ட மக்களின் உறவினர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். மேலும் பலர் தமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளார்கள். இதில் மார்க்கம், தோர்ன்ஹில் மக்களும் அடங்குவர்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்த அழகான தீவில் வசிக்கும் மக்களின் நல்வாழ்வு மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவர்கள் மன நிம்மதியுடன் தங்களது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கும்போது அவர்களுக்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

‘கனவுகள் வாழும் நம்பிக்கை மீண்டும் மலரும்”

என்ற வாசகத்தோடு அவர் தனது உரையினை நிறைவுசெய்துள்ளார்.

red

மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

December 10, 2025

நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கட்டிடம்

man

பருவமழை; மன்னாருக்கு முன்னெச்சரிக்கை

December 10, 2025

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை சற்றுமுன் விடுத்துள்ளது.

un

மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

December 10, 2025

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை

jan

பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் குறைபாடுகளை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி

December 10, 2025

நாட்டின் பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் நீண்டகால குறைபாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். இந்திய ஊடகம்

wat

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர் குளத்தில் மூழ்கி பலி!

December 10, 2025

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி

mari

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திட்டமிட்ட நிதி நிவாரணம் அறிவித்தது போன்றே வழங்கப்பட வேண்டும்

December 10, 2025

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை

sou

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நன்கொடை

December 10, 2025

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக

kos

71 குடும்பங்கள் வெளியேற்றம்

December 10, 2025

மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)

jail

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 12 பேர் கைது

December 10, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்

ila

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

December 10, 2025

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்

fr

ஜனாதிபதியின் செயலாளருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

December 10, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லேம்பெர்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

wo

பொதுமக்கள் மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்

December 10, 2025

பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின்