சூர்யா 47 திரைப்படம் குறித்து லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மலையாள புகழ் பேசில் ஜோசப் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது. அத்தகவல் ரசிகர்களை ஹைப்பில் ஆழ்த்தியிருக்கிறது
முக்கிய அம்சங்கள்:
சூர்யா 47 படத்தை ஜீத்து மாதவன் இயக்கவுள்ளார். மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். பஹத் பாசிலை வைத்து ஆவேஷம் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த ஜீத்து மாதவன் அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளாராம். எதிர்பாராத கூட்டணியில் உருவாகும் சூர்யா 47 மீது மிகப்பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த கால ட்ரெண்டிற்கு ஏற்ப படங்களை கொடுக்கும் ஜீத்து மாதவன் சூர்யாவிற்கு ஒரு தரமான ஹிட் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூர்யா 47 படத்தில் பேசில் ஜோசப் நடிப்பது உறுதி தான் என்கின்றனர். இதற்கிடையில் கதை விவாத வேலைகள் எல்லாம் முடிவடைந்து தற்போது படத்தின் படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றதாம். அதற்கிடையில் நடிகர்கள் தேர்வையும் ஜீத்து மாதவன் நடத்தி வருவதாக தெரிகின்றது.
சூர்யா தற்சமயம் கருப்புமற்றும் சூர்யா 46 என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில் கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதனைத்தொடர்ந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 46 திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவு பெறும். எனவே ஜனவரி மாதம் முதல் சூர்யா 47 திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா இணைவார் என தெரிகின்றது.
ஆவேஷம் ஸ்டைலில் சூர்யாவிற்கு ஒரு படத்தை ஜீத்து மாதவன் கொடுக்கப்போகின்றார் என்ற தகவலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திவிட்டது. இவ்வாறு நாளுக்கு நாள் இப்படத்தை பற்றி வெளியாகும் தகவல்கள் ஸ்வாரஸ்யமானதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டுவதாகவும் உள்ளது. ஆனால் இந்த தகவல் எல்லாம் எந்தளவிற்கு உண்மையான தகவல் என தெரியாது. இருப்பினும் இத்தகவல் ரசிகர்களை ஸ்வாரஸ்யத்தில் ஆழ்த்தி வருகின்றது.