சிங்கப்பூர், மலேசியாவை சேர்ந்த தேரர்கள் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர்!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி வண, கே. குணரத்ன தேரர் தலைமையிலான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த குழு, வெள்ளிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவை சந்தித்தது.

Clean Sri Lanka செயலகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க, இந்தக் குழு ஜனாதிபதியின் செயலாளரிடம் உறுதியளித்தது.

அண்மைய வரலாற்றில் இலங்கை முகங்கொடுத்த மிக மோசமான அனர்த்தமான டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கும் வெளிநாட்டு சங்கங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவைப் பெற தமது சங்கம் உள்ளிட்ட குழு, சுய விருப்பத்துடன் முன்வந்தாக கலாநிதி வண, கே. குணரத்ன தேரர் இங்கு தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான பொருள் உதவிகளை துரிதப்படுத்தவும், அரசாங்கம் செயல்படுத்தும் Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்திற்கு ஒரு முறையான திட்டத்தின் கீழ் ஆதரவளிக்கவும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள், அடுத்த சில நாட்களில் இந்நாட்டுக்கு வந்து சேரும் என்றும் தூதுக்குழு மேலும் தெரிவித்தது.

சீரற்ற யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் முறையான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க முறையான நகர திட்டத்தின் மூலம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு அவசியமான உபகரணங்களை வழங்குதல் தொடர்பான முதற்கட்ட இணக்கத்தை இரு தரப்பினரும் எட்டினர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சு, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் செயலாளர் டயனா லீ (Diana Lee), சிங்கப்பூர் சிங்கள பௌத்த சங்கத்தின் செயலாளர் ரஞ்சனி சில்வா, Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத் உட்பட தூதுக் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்