சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி, ஐயனார் கோயிலடி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகின்றது.
மேற்படி யுவதி கடந்த 15ஆம் திகதி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி யுவதி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.