டொராண்டோ மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் 9 அதிகாரிகள், சமூக விரோதக் கும்பல்களுடன் கைகோர்த்துக்கொண்டு பல்வேறு பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
யோர்க் பிராந்தியக் காவல்துறையினர் (York Regional Police) நடத்திய ரகசிய விசாரணையில், இந்தக் காவலர்கள் செய்த குற்றங்கள் வெளிப்பட்டுள்ளன.
டொராண்டோ தெற்குச் சிறைச்சாலையின் (Toronto South Detention Centre) ஓர் உயர் அதிகாரியைக் கொலை செய்ய இவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ரகசியத் தகவல்களைப் பரிமாறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.