இந்து கல்லூரி – கொழும்பு ; பழைய மாணவர் சங்கத்தால் பாரிய அளவிலான நிவாரணம்

இந்து கல்லூரி – கொழும்பு, பழைய மாணவர் சங்கத்தின் தன்னார்வலர்கள் குழு திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்கு ரூபா 5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான அவசர நிவாரணத்தை வழஙகியுள்ளார்கள்.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், வெருகல் மற்றும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு ஆகிய நான்கு பகுதிகளுக்கும் நிவாரணப் பொதிகளைக் கொண்டு சென்று வழங்கினார்கள்.

நேற்றைய தினம் அதிகாலை 2.30 மணிக்கு கொழும்பிலிருந்து வடகிழக்கு நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்த குழுவினர் தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கும் மேலாக வீதிகளில் பயணித்து இந்தப் பணியை நிறைவேற்றினர்.

வாகனத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ஓரிரண்டு மணி நேர தாமத்தின் பின்னரே பயணத்தைத் தொடரக் கூடியதாக இருந்ததாக குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

அனைத்து சவால்களையும் தாண்டி குழுவினர் நள்ளிரவு 12.15 மணியளவில் மாந்தை மேற்குப் பிரதேச செயலகத்தை அடைந்து பிரதேச செயலாளரிடம் பொருட்களைக் கையளித்தனர்.

தமது நிவாரணப் பணிகள் குறித்து இந்து கல்லூரி – கொழும்பு, பழைய மாணவர் சங்கத்தினர் “அடுத்த கட்டமாக மலையகப் பகுதிகளுக்குச் செல்ல நாங்கள் ஆலோசித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டனர்.

நிவாரணப் பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தினர் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மேற்படிப் பணி வெற்றிபெற உதவிய அனைத்து தன்னார்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், இந்து மகளிர் கல்லூரி, தமிழ்ச் சங்கம், பழைய மாணவர்கள், நிதியுதவி அளித்த நன்கொடையாளர்கள் ஆகிய சகலதரப்பினரதும் பங்களிப்பு இன்றியமையாதவை என இந்து கல்லூரி – கொழும்பு, பழைய மாணவர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

By C.G.Prashanthan

pa hi

இந்து மத மாணவியர் பாகிஸ்தான் அரச பள்ளியில் கட்டாய மத மாற்றம்?

December 6, 2025

பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் இந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம்

sa

சிங்கப்பூர் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போன், வாட்ச்’ பயன்படுத்த கட்டுப்பாடு?

December 6, 2025

சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், ‘ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்’ பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில்

hea

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

December 6, 2025

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும்,

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய