கொழும்பின் பல பகுதிகளில் மீண்டும் அடைமழை பெய்து வருகின்றது.
சீரற்ற காலநிலையின் காரணமாக கடந்த சில தினங்களில் நாட்டில் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதியில் மழையற்ற காலநிலை நிலவி வந்தது.
எனினும் நேற்று மாலை முதல் கொழும்பின் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.