குருக்கள் மடத்தில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (17) களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த மார்ச் 09 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பிரதேசத்தினை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக குழுவினர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட போது அப்பிரதேசம் குற்றப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்புப் பட்டிகள் இடப்பட்டிருந்த நிலையில் அந்த பாதுகாப்பு பட்டிகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டமையால் குறித்த பிரதேசத்தினை நீதவான் பரிசீலனை செய்வதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானத்திற்கமைய இன்றைய குறித்த விஜயம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த வழக்கின் சட்டத்தரணி முபாரக் முஹாசன் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 30 ஆம் திகதி குறித்த அகழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான தோதான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சட்டத்தரணி முபாரக் முஹாசன் தெரிவிக்கையில்,

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கானது கடந்த மார்ச் 09 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திலே மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதமன்றத்தினால் ஆக்கப்பட்ட கட்டளைகளுக்கமைவாக எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி குறித்த பிரதேசத்தை அகழ்வதென மன்றினால் கட்டளையாக்கப்பட்டது.

அதன் நிமித்தம் கடந்த தினத்திலே நீதிமன்றிலே பிரசன்னமாகியிருந்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் சட்த்தரணிகள், பாதிக்கப்பட்டோர் குறித்த மனிதப் புதைகுழி அமைந்துள்ளாக நம்பப்படுகின்ற பிரதேசத்திற்கு களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

ஏலவே கௌரவ மன்றினால் மன்றினால் அப்பிரதேசம் ஒரு குற்றப் பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டு பொலிஸாரினால் பாதுகாப்புப் பட்டிகள் இடப்பட்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் உள்ளிட்டோர் மேற்கொண்ட அந்த கள விஜயத்தின் போது அந்தப் பாதுகாப்புப் பட்டிகள் அகற்றப்பட்டு பௌதீக ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றிருப்பது தொடர்பிலும் அவதானிக்கப்பட்டது.

இதன்பிரகாரம் நகர்த்தல் பிரேரணை மூலம் குறித்த விடயத்தை மன்றுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து இன்று கௌரவ மன்றினால் குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயமொன்று மேற்கொள்ளப்படடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையிலே பொலிஸாரினால் இடப்பட்டிருந்த பிளாஸ்டிக் பட்டிகள் அகற்றப்பட்டிருப்பதோடு, அங்கிருந்த மரமொன்றும் அகற்றப்பட்டிருந்தது. ஆனால் அவை சந்தேகத்திற்கிடமான புதைகுழி அமையப்பட்டதான அந்த இடத்திலே எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை என்று கௌரவ மன்று திருப்தியடைந்துள்ளது.

அந்த வகையிலே எதிர்வரும் 30 ஆம் திகதி குறித்த அகழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான தோதான கட்டளைகளை மன்று ஆக்கியிருக்கின்றது என்று தெரிவித்தார்.

in

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பணப் பரிவர்த்தனை வசதி

March 17, 2026

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்தும் நோக்கில், NPCI International Payments Limited

gg

78 கிலோ போதைப்பொருள் கிளிநொச்சி கடற்பரப்பில் கைப்பற்றல்

March 17, 2026

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு

Gch

பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க ஜப்பான் நிதியுதவி

March 17, 2026

ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை

Thamila

ஊழல் மோசடி; அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான பிரேரணை: கையொப்பமிட தமிழரசுக் கட்சி மறுப்பு!

March 17, 2026

ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில்

arr

ஐந்து சீன பிரஜைகள் விமான நிலையத்தில் கைது

March 17, 2026

சுமார் 1.8 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற

veth

வடக்கில் பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கை

March 17, 2026

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு வாரத்தினை பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்ndடுக்க வேண்டும் எனவடக்குமாகாண ஆளுநர் நடைபெற்ற

Briti

ஒக்டோபரில் மீண்டும் லண்டன் – கொழும்பு நேரடி விமான சேவை!

March 17, 2026

2026 குளிர்கால அட்டவணைக்கான தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லண்டன் கொட்விக் – கொழும்பு நேரடி விமான

viha

ரஜ மகா விகாரை வளாகத்தில் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்த தொல்பொருள் திணைக்கள ஊழியர் கைது

March 17, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜ மகா விகாரை வளாகத்தில், ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக்

cyber

ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது

March 17, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134

WFP

உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் !

March 17, 2026

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என

ddd

குருக்கள் மடத்தில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி!

March 17, 2026

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான நீதிமன்ற

Ottawa

ஒட்டாவாவில் பனிப்புயலால் மின்வெட்டு; நெடுஞ்சாலைகளும் மூடல்

March 17, 2026

ஒட்டாவா–ஹெட்டினோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்தாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி சிரமத்துக்காளாகினர் எனவும் நெடுஞ்சாலை