கிளிநொச்சியில் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

சமூக சக்தியென்பது கட்சியை வலுப்படுத்தும் அரசியல் ஆயுதம் அல்ல. அது வறுமையை ஒழிப்பதற்குரிய கூர்மையான ஆயுதமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். எனவே, எல்லா விடயங்களிலும் எதிர்ப்பு அரசியல் நடத்தாமல், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் புதன்கிழமை (25) கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவான ஆலோசனைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

அடிப்படை வசதிகள் மேம்பாடு, மீன்வளத் துறை வளர்ச்சி, குடிநீர் வசதி, வீதி அமைப்பு, விவசாயம் மற்றும் இளைஞர் தொழில் வாய்ப்புகள் போன்ற முக்கிய துறைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக “சமூக சக்தி” திட்டம் குறித்து கூட்டத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளும், குறித்த திட்டத்தின் செயல்முறை மற்றும் அதன் நடைமுறைப்படுத்தல் குறித்து வினாக்களை தொடுத்தனர்.

குறிப்பாக, இந்தத் திட்டம் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்து என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. எனினும், அதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

சமூக சக்தி” திட்டம் எவ்விதத்திலும் ஒரு கட்சியை வலுப்படுத்தும் அரசியல் முயற்சி அல்ல என்று தெளிவுபடுத்தினார். இது வறுமை ஒழிப்பு, சுயதொழில் மேம்பாடு மற்றும் சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டமாகும்.

சமூகத்தின் பின்தங்கிய தரப்பினருக்கு நேரடி நன்மை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். வடக்கு மாகாணத்தை எல்லா வழிகளிலும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய