கிரீன்லாந்து தீவை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தத் தயாhர்! – டொனால்ட் ட்ரம்ப்

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை வாங்குவதற்குத் தாம் உடனடிப் பேச்சுவார்த்தைகளை விரும்புவதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்தார்.

உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ள டாவோஸ் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது “அளவற்ற வலிமையையும் ராணுவத்தையும் பயன்படுத்தினால் எங்களை எவராலும் தடுக்க முடியாது, ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன். எனக்குப் போர் புரிய விருப்பமில்லை, எனவே நான் பலத்தைப் பயன்படுத்த மாட்டேன்” என்று ட்ரம்ப் கூறினார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தனது உரையில், ட்ரம்ப் பலமுறை கிரீன்லாந்தையும் ஐஸ்லாந்தையும் குழப்பிக் கொண்டு பேசியமை அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

எவ்வாறாயினும் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளின் பொருட்கள் மீது 10% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அவர் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

ட்ரம்பின் இந்தப் பேச்சு குறித்து லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசிய பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதியின் அழுத்தங்களுக்குத் தாம் ஒருபோதும் பணியப்போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.

கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கும் டென்மார்க்கிற்கும் மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது. சீன காற்றாலை பண்ணைகள், பணவீக்கம் மற்றும் வடகடல் எரிசக்தி நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் குறித்தும் ட்ரம்ப் தனது உரையில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்