ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது

மக்கள் விடுதலை முன்னணி பயங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாளை சனிக்கிழமை மட்டக்களப்பில் புதிய பயங்கரவாத பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம், பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை தமிழரசுக்கட்சி வழங்கவுள்ளதுடன் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகச் சொல்லி ஆட்சி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதை விடுத்து பயங்கரவாதம் தடைச் சட்டத்தையும் விட மோசமான சட்டத்தை பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரிலே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையிலே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கடந்த காலத்திலே நாங்கள் செயற்பட்டு வந்தோம். தொடர்ந்து வந்த அனைத்து அரசாங்களிடமும் பயங்கரதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். அச்சட்டம் தேவையில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்ச்சியாக முன்வைத்து வந்தது.

கடந்த ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் ஏ.டி.ஏ என்ற பெயரிலே இதேபோல ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட போது நாடு முழுவதும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரியும், பதிய சட்டம் தேவையிலை என்று கோரியும் கையெழுத்தப் போராட்டங்களை நாங்கள் நடத்தியிருந்தோம்.

கடந்த அரசாங்கம் சி.டி.ஏ என்ற பயங்கரவாத் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். நாங்கள் அனைவரும் போராட்டஙகளில் ஈடுபட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று போராட்டம் நடத்தியதும், அந்த சி.டி.ஏ சட்டத்தைப் பின்வாங்கியது. ஆனால் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கின்றது. அதே போன்று ரணில் விக்கிரமங்க காலத்தில் ஏ.டி.ஏ என்று சட்டம் கொண்டு வந்தார்கள் நாங்கள் போராடி அதனை வேண்டாம்.

கொண்டு வரப்பட இருந்த சட்டம் பின்வாங்கப்பட்டது. ஆனால் அதே பயங்கரவாதத் தடைச் சட்டம் அப்படியே இருக்கின்றது.

அதேபோல தான் இந்த பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நாங்கள் இதனை வேண்டாம் என்று சொல்லும் போது அரசாங்கம் இதனை வாபஸ் பெற்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கப் பார்க்கின்றார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

தற்போதை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் ஒருவரை விசாரிப்பதானாலும், கைது செய்வதானாலும் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் பொறுப்பில் இருக்க வேண்டும். ஆனால் இப்போது வர இருக்கும் புதிய சட்டத்தில் சாதாரண ஒரு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கூட இந்த புதிய சட்டத்தினூடாகக் கைது செய்யக் கூடியதாக இருக்கின்றது. நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் புதியதோ, பழையதோ அதற்கு முழுமையான எதிரானவர்கள்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியாக இருந்தபோது இந்தச் சட்டத்தை முழுமையாக எதிர்த்து இந்தச் சட்டம் கூட்டத்தைப் பகிஸ்கரிப்பார்கள். தமிழரசுக் கட்சி நாங்களாவது இச்சட்டத்தில் உள்ள் விடயங்கள் என்ன என்று அறியும் நோக்கில் கூட்டங்களில் கலந்து கொள்வோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக