ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க விஜேராம இல்லத்திற்கு சென்றிருந்தனர்.

அத்துடன், ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்ததால் மின்சார சபை ஊழியர்களும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர்.

விஜேராம இல்லத்தில் தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக, அதிகாரிகள் திரும்பி வந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வினவிய போது,

விஜேராம இல்லத்தில் ஆறு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர்சந்தன பண்டார தெரிவித்தார்.

நிலுவைத் தொகை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான வழக்கமான நடைமுறையின்படி, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், நீர் கட்டணம் குறித்து பொறுப்பான நபர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், விஜேராம இல்லத்திற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.

அரசாங்க சொத்து ஆய்வாளர்கள் பொருட்களை வரிசைப்படுத்தி மகிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பொருட்களை பிரித்த பின்னர, வீடு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச தரப்பு கூறுகிறது.

இந்த வீட்டில் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்திற்குச் சொந்தமான பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான பொருட்களைப் பட்டியலிட்டுள்ளதாகவும் மகிந்த தரப்பு தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச இந்த வீட்டை விட்டு வெளியேறியிருந்தாலும், வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.

எனவே, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களையும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் திகதியில் செலுத்த வேண்டும்.

எனவே, இந்த வீட்டை விரைவில் கையகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகிந்த தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு

ar

புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி வந்த லொறி தடம்புரண்டு விபத்து

November 18, 2025

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில்

cha

பொதுநலவாய சதுரங்கப் போட்டி; இலங்கைக்கு 09 பதக்கங்கள்

November 18, 2025

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 03 தங்கப்

ey

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

November 18, 2025

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி

aa

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

November 18, 2025

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான

p_Anu

சட்டவாட்சி பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?

November 18, 2025

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,ச ட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த

kath

மனநல நோயாளியின் கத்தி குத்தில்: 7 பேர் படுகாயம்

November 18, 2025

கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல

Judment

கொடிகாமம் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; விசாரணைகளுக்கு உத்தரவு

November 18, 2025

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும்

ko

மண்சரிவு அபாயம்

November 18, 2025

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி நேற்று திங்கட்கிழமை (17) காலை

ma

சிறைச்சாலையில் குழப்பங்கள் வெடிக்குமென சபையில் எச்சரிக்கை?

November 18, 2025

அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை “வெடிக்கத் தயாராக” இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும்