உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜேவிபிக்கு தொடர்புள்ளதால் குண்டுவெடிப்பு விசாரணை முடக்கம்?

யிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களும் தொட்பு பட்டுள்ளதால் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும் முன்னுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்தார்.

புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் கைது தொடர்பில் வெள்ளிக்கிழமை (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளை ஒருபோதும் நாங்கள் குழப்பப்போவதில்லை. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கிறோம். புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலே சிறந்த அதிகாரி. விசாரணைக்காகவே அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மாத்திரமல்ல யாராக இருந்தாலும் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு அழைத்தால் அதற்கு செல்லவேண்டும். தகவல்கள் தெரிந்திருந்தால் அதனை தெரிவிக்க வேண்டும். எங்களை அழைத்தால் நாங்களும் செல்வோம்.

இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு அழைப்பது சாட்சி கூறுவதற்கு அழைக்கும் நடவடிக்கையை அரசாங்கத்துக்கு செய்ய முடியும். அதனால் இந்த தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் காட்டும் வரை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் மேற்கொள்ளப்போவதில்லை என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியலில் இருந்த நபர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என்ற கருத்து நாட்டு மக்களிடம் இருக்கிறது. அவர்களது தேசியப் பட்டியலில் இருந்தவர்களை, அவர்களின் சொத்துக்களை விடுவிக்கின்றனர்.

அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குகின்றனர். இவ்வாறு அனைத்தையும் செய்யும் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும் முன்னுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை.

அத்துடன் நாங்கள் அரசாங்கம் செய்யும்போது, இந்த தாக்குதல் தொடர்பில் உண்மையை கண்டுபிடிக்குமாறு கர்த்தினால் ஆண்டகை வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொண்டார், ஏனைய மத தலைவர்களையும் தூண்டிவந்தார். உலக நாடுகளுடன் பேசினார். ஆனால் இந்த அரசாங்கம் வந்த பின்னர் அந்த ஒன்றையும் காண்பதற்கு இல்லை. அதனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இந்த தாக்குதல் தொடர்பில் அவர் தெரிந்த தகவல்களை பெற்றுக்கொண்டு பிரதான சூத்திரதாரியை காண்பிக்க வேண்டும் என்றார்.

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –