நல்லூர் பிரதேச சபையின் உபதவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோண்டாவில் பகுதியில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.