ஈழத்தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெற விரும்பினால் அதனை வழங்குங்கள் – சுமந்திரன்

இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின்பேரில் கடந்த வார இறுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் இந்தியா சென்ற குழுவில் அங்கம் வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அங்கு வேறு பல சந்திப்புக்களிலும் பங்கேற்றார்.

அதன்படி புதுடில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நிறுவனத்தின் நாளந்தா மண்டபத்தில் புதன்கிழமை (11) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஆர்.கே.ராதாகிருஷ்ணனால் இயக்கப்பட்ட ‘முகமில்லா மனிதர்கள்: இந்தியாவில் தமிழ் அகதிகளின் பயணம்’ எனும் தலைப்பில் ஆவணத்திரைப்படமொன்று திரையிடப்பட்டது. அத்திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த எமது ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பதும், தாயகத்தை வலுப்படுத்தவேண்டும் என்பதுமே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இந்தியாவில் வாழும் எமது உறவுகளும், இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் அடுத்த தலைமுறையினரும் அந்த மண்ணிலேயே குடியுரிமை பெற்று கௌரவமாக வாழவேண்டும் என்று விரும்பினால், அதனை எம்மால் மறுதலிக்கமுடியாது. மாறாக அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுதான் முறையானதாகும்.

ஆகவே அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப இந்த விடயத்தில் தாயகம் திரும்பவும் அல்லது இந்திய மண்ணிலேயே குடியுரிமை பெறுவதற்கும் அவர்களுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பது தான் நியாயமானதாகும்.

அதேவேளை பலர் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு நாட்டம் கொண்டிருக்கின்றனர். எனினும் அவர்கள் தாயகம் திரும்பும்போது, முன்னர் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறினர் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் தாயகம் திரும்புகையில் அவ்வப்போது கைதுசெய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அவ்வாறு மீண்டும் நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். இருப்பினும் அதனைச் செய்யாமல் இலங்கை அரசாங்கம் இழுத்தடிப்பதனால், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகமும் ஈழத்தமிழ் அகதிகளைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைத்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார்.

arr

போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

March 13, 2026

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று

Harini-amarasooriya

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே!

March 13, 2026

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப்

44

கனடா பீல் பிராந்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு

March 13, 2026

பீல் பிராந்திய காவல்துறை ( Peel Regional Police) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தி,

sas

ஊழல் குற்றச்சாட்டு; சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணை நிறைவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க

savithri pol

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ‘அவள் வாழ்வின் உயிர்நாடி’

March 13, 2026

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா

nil

மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டறியப்பட்டது

March 13, 2026

இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில்

s

ஆழ்கடலில் பாரிய சுற்றிவளைப்பு: போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 10 பேர் கைது!

March 13, 2026

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பலநாள்

it

இலங்கையின் சுகாதார சேவைக்கு உலகளாவிய பாராட்டு

March 13, 2026

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள வெப்பமண்டல நாடுகளின் சரும நோய்கள் குறித்த 2ஆவது சர்வதேச விசேட நிபுணர்கள் மாநாடு புதன்கிழமை

un_1

ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை

March 13, 2026

வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை

5

ஹோர்மூஸ் நீரிணை அருகே 6 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

March 13, 2026

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல்

ir

உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை இன்று ஈரானுக்கு அனுப்ப நடவடிக்கை

March 13, 2026

இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கடிக்கப்பட்ட’IRIS DENA’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்

Poli

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

March 13, 2026

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில், வீட்டு