இழப்புக்களுக்கும் மீட்சிக்கும் இடைப்பட்ட இத்தருணத்தில் தொடர் உதவிகளே இலங்கைக்கு அவசியம் – ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டு

தற்போதைய அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையர்கள் ஒருவருக்கொருவர் மிதமிஞ்சிய கருணையைக் காண்பித்துள்ளனர். இழப்புக்களுக்கும், மீட்சிக்கும் இடைப்பட்ட இத்தருணத்தில் ஒருமைப்பாடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் உதவிகள் மற்றும் ஆதரவுமே நாட்டுக்கு இன்றியமையாததாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

‘தித்வா’ சூறாவளியின் விளைவாகக் கடந்த வெள்ளிக்கிழமை மிகமோசமான மண்சரிவு மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளப்பெருக்கு என்பன பதிவான நிலையில், நாம் இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மிகமோசமான வெள்ளப்பெருக்காக அண்மைய அனர்த்தம் கருதப்படுகிறது.

இவ்வனர்த்தத்தினால் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், காணாமல்போயும் இருப்பதுடன் இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையின் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் மிகநெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கமைய கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஊடாக உள்நாட்டு மனிதாபிமான உதவிக்குழு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதுடன் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் கிளை அலுவலகத்தின் அனுசரணையுடன் கூட்டு உதவித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

அத்தோடு உணவு, தூய குடிநீர், சுகாதார மற்றும் தங்குமிட வசதிகள், கர்ப்பிணிப்பெண்களுக்கு அவசியமான பொருட்கள் உள்ளிட்ட உடனடி அத்தியாவசியத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு ஏதுவான வகையில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் துரிதமாக இயங்கிவருகிறது. அதுமாத்திரமன்றி ஐ.நா அலுவலகம் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து உதவிகள் தேவைப்படுவோரை அடையாளங்காண்பதற்கான கூட்டு மதிப்பாய்வையும் முன்னெடுத்துள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்சே, ‘தற்போதைய அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையர்கள் ஒருவருக்கொருவர் மிதமிஞ்சிய கருணையைக் காண்பித்துள்ளனர். இழப்புக்களுக்கும், மீட்சிக்கும் இடைப்பட்ட இத்தருணத்தில் ஒருமைப்பாடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் உதவிகள் மற்றும் ஆதரவுமே நாட்டுக்கு இன்றியமையாததாகும். எனவே பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீட்சியை நோக்கிப் பயணிப்பதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உதவமுடியும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

po

உதவித் தொகையை அதிகரித்த பிரித்தானியா

December 6, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள்

veh

வாகன பாவனை தொடர்பில் எச்சரிக்கை

December 6, 2025

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என

thera

ஜனாதிபதி – தேரர் சந்திப்பு!

December 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி

pra

நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

December 6, 2025

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில்

dssdvds

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு அபராதம்

December 6, 2025

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி

pa hi

இந்து மத மாணவியர் பாகிஸ்தான் அரச பள்ளியில் கட்டாய மத மாற்றம்?

December 6, 2025

பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் இந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம்

sa

சிங்கப்பூர் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போன், வாட்ச்’ பயன்படுத்த கட்டுப்பாடு?

December 6, 2025

சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், ‘ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்’ பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில்

hea

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

December 6, 2025

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும்,

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச