இலவச பாடநூல் திட்டம்; தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள், அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1982 களில் இலவச பாடநூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்ட பின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இந்த தவறு திருத்தப்படுமா என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பிரதம அமைச்சரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமாசூரியவிடம் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் சிங்கள மக்களைப்போல் தமிழர்களும் வரலாற்று அடிப்படைகளைக் கொண்ட, இந்த மண்ணுக்கு பூர்வீகமான சொந்த உரித்துக்கொண்ட தேசிய இனம். விஜயனும் தோழர்களும் இந்த நாட்டுக்கு வரும் முதலே பஞ்ச ரச்சரங்களுடன் நாகர்களாக, இயக்கர்களாக தமிழர்கள் ஈழத்து மண்ணில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை, மகாவம்சம் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்பிடுகிறார்கள்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இந்த மண்ணை வன்வழைப்பு செய்து அதிகார ஆட்சி செய்த போதும் தமிழர்கள் தீரத்துடன் அவர்களுக்கு எதிராக போராடியுள்ளார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கு மண்ணில் அரசுகள் அமைத்து சங்கிலியன்,பண்டாரவன்னியன், பரராஜசேகரன் போன்ற மன்னர்கள் தீரத்துடன் தாயக தேசத்திற்காக போராடியுள்ளனர்.

நல்லநாச்சி போன்ற பெண் சிற்றரசர்களும் இந்த மண்ணின் விடுதலைக்காக போராடித் தங்களை அர்ப்பணித்தவர்கள். 1920 ஆம் ஆண்டுக்கு பின்னர் அநாகரிக தர்மபால, டி.பி. ஜாவா போல ஆறுமுகநாவலரும் சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கவும், வளர்க்கவும் போராடியுள்ளார்.

இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள்,அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1970களில் தமிழ், வரலாற்று பாடநூல்களில் தமிழரின் வரலாறு ஓரளவுக்கேனும் குறிப்பிடப்பட்டிருந்தது. 1982களில் இலவச பாட நூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டபின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்துள்ளதை காண முடிகிறது.

கடந்த யுத்த காலங்களை பயன்படுத்தி சங்கிலியன், பண்டாரவன்னியன்,நல்லநாச்சி, எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களின் வரலாறுகள் இல்லாதழிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா? இலங்கையின் விடுதலையில் தீரத்துடன் போராடிய தமிழ் மன்னர்களின் வரலாறு பாட நூல்களில் உட்புகுத்தப்படுமா? கல்வித்திட்டத்தில் வரலாற்றுப் பகுதியில் தமிழர் வரலாற்றுக்குரிய தனி அங்கீகாரம் வழங்குவதில் என்ன தடை இருக்கிறது?

தமிழர் வரலாற்றின் இலட்சினைகள், கல்வெட்டுக்கள், ஓலைகள் இந்நாட்டில் பாதுகாப்பாக பேணப்படுகின்றதா? சங்கிலியன்,பண்டாரவன்னியன் நல்லநாச்சி, எல்லாளன் போன்ற மன்னர்களின் வரலாறுகளை தமிழ், வரலாறு, சித்திரப் பாடங்களில் இருப்பதற்கு தங்களால் உறுதிப்பாடு தரமுடியுமா? என்று கேள்வியெழுப்பினார்.

po

உதவித் தொகையை அதிகரித்த பிரித்தானியா

December 6, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள்

veh

வாகன பாவனை தொடர்பில் எச்சரிக்கை

December 6, 2025

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என

thera

ஜனாதிபதி – தேரர் சந்திப்பு!

December 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி

pra

நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

December 6, 2025

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில்

dssdvds

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு அபராதம்

December 6, 2025

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி

pa hi

இந்து மத மாணவியர் பாகிஸ்தான் அரச பள்ளியில் கட்டாய மத மாற்றம்?

December 6, 2025

பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் இந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம்

sa

சிங்கப்பூர் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போன், வாட்ச்’ பயன்படுத்த கட்டுப்பாடு?

December 6, 2025

சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், ‘ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்’ பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில்

hea

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

December 6, 2025

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும்,

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச