இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு தடுப்பூசி காரணமா?

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் விளக்கம் கொழும்பு IDH வைத்தியசாலையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு ‘ஒண்டான்செட்ரான்’ (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா என்பது குறித்து இதுவரை உறுதியாகத் தௌிவுபடுத்தப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுத் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிரிழந்தவர்களின் மரணப் பரிசோதனை மாதிரிகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, குறித்த நோயாளிகள் உயிரிழப்பதற்கு முன்னரே ‘ஒண்டான்செட்ரான்’ தடுப்பூசியின் 4 தொகுதிகளை (Batches) வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இந்த மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து, அந்த மருந்தின் ஏனைய அனைத்து தொகுதிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

மேலும், குறித்த உற்பத்தி நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏனைய 10 மருந்து வகைகளையும் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மருந்து இறக்குமதி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி மனுஜ் சி. வீரசிங்க, மருந்து இறக்குமதியானது அமைச்சர்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ தீர்மானிக்கப்படும் செயல்முறை அல்ல என்பதைத் தௌிவுபடுத்தினார்.

“மருந்து இறக்குமதி என்பது அமைச்சர்கள் அல்லது அரசாங்கங்களின் விருப்பப்படி நடப்பதில்லை. சுகாதார அமைச்சின் வருடாந்தத் தேவைக்கமைய டெண்டர் கோரப்பட்டு, கொள்முதல் குழுக்களின் ஊடாகவே இந்தச் செயல்முறை முன்னெடுக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான மருந்துகள் தேவை எனில், அதற்கான டெண்டர் 2024 இல் கோரப்படும். ஒரு ஓடர் வழங்கி மருந்து நாட்டிற்கு வருவதற்கு குறைந்தது 11 மாதங்கள் வரை எடுக்கும்.

மருந்துகளை நினைத்த நேரத்தில் கடையில் வாங்குவது போல் வாங்க முடியாது. அவற்றை உற்பத்தி செய்ய நீண்ட காலம் எடுக்கும். இந்த நடைமுறை கடந்த காலத்திலும் இப்படியே இருந்தது, இப்பொழுதும் இப்படியே தொடர்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

jana

உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற வேண்டுமென்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு

December 18, 2025

பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு

lan

யாழ்.மாநகரசபை காணியை அபகரித்தவர் அகப்பட்டார்!

December 18, 2025

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் தனதாக்கிக் கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு இன்றையதினம்(18.12.2025)மாநகரசபை முதல்வர் மதிவதனி

sana

இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் – சங்கக்கார

December 18, 2025

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார

metr

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

December 18, 2025

அடுத்து வரும் 36 மணி நேரத்தில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த

elon

முதலிடத்தில் எலான் மஸ்க்!

December 18, 2025

600 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான்

bri

‘உலகளாவிய கிளர்ச்சி’ முழக்கத்தை எழுப்புபவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

December 18, 2025

பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர பொலிஸார், ‘இன்டிபாடா’ (Intifada – உலகளாவிய கிளர்ச்சி) என்ற முழக்கத்தை எழுப்புபவர்கள்

navee

சிட்னி தாக்குதல் பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்டார்!

December 18, 2025

ஆஸ்திரேலியாவில், ‘ஹனுக்கா’ நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்ட நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட 59

in ru

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு கோரிக்கை

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தவறான பாதையில் செல்வதை இந்தியா எடுத்துச் சொல்ல வேண்டும் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா –

put

ஐரோப்பாவை கடுமையாக எச்சரிக்கும் புடின்

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாரில்லை எனவும் நிலங்களை பலவந்தமாக கைப்பற்ற தயங்கப் போவதில்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி

sim

சிம்பு -ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி?

December 18, 2025

சிலம்பரசன் தற்சமயம் தனது 49 ஆவது திரைப்படமான அரசன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தற்போது

pac

திரைப்பட விருதிற்கான நடுவர் குழு தெரிவு

December 18, 2025

திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு தனியார் அமைப்புகள்

raja

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’

December 18, 2025

நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சஹானா சஹானா’ எனும்