இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் ; ஹரின் பெர்ணான்டோ

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான உறுதியான தகவல்களை அறிந்துகொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயவும் அரசாங்கம் இரண்டு நாள்பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டு 18 நாட்கள் கடந்துள்ளபோதும் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பீட்டு தொகையை உறுதியாக தெரிவிப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்ட 25ஆயிரம் ரூபா தொகையே இன்னும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை வழங்குவதிலும் ஒருசில பகுதிகளில் அது அரசியலாக்கப்பட்டுள்ளது. அதனால் 25ஆயிரம் ரூபா கிடைக்கப்பெறாத மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையில் விரக்தியடைந்துள்ளனர்.

அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்த 5மில்லியன் கோடி ரூபாவை எவ்வாறு அரசாங்கம் வழங்கப்போகின்றது.? அத்துடன் இடம்பெற்ற அனர்த்தத்தினால் நாடுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பில் நிதி அடிப்படையில் அதன் மதிப்பீடு என்ன? இந்த விடயங்களை அறிந்துகொள்ளவும் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கவும் தெரியாத தகவல்களை அறிந்துகொள்ளவும் அரசாங்கம் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி, ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் இரண்டு நாள் விவாதம் ஒன்றுக்கு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

ஏனெனில் இம்பெற்ற அனர்த்தத்தில் மொத்தமாக எத்தனை வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையான தகவல் யாருக்கும் தெரியாது. அதனால் ஊடகங்கள் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் நாளுக்கு நாள் முரண்பட்ட எண்ணிக்கையை தெரிவித்து வருகின்றன.

உண்மையான தகவல் தெரியாமர் இருப்பதாலே இவ்வாறு மாறுபட்ட எண்ணிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன. அதனால் பாராளுமன்றத்தை கூட்டி, அனர்த்தம் தொடர்பில் பூரண தெளிவொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.

2003ஆம் ஆண்டு இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் 24ஆயிரம் வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன. சுமார் 50ஆயிரம் வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்தமுறை இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகும். என்றாலும் 6ஆயரம் வீடுகளே முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதனாலே பாராளுமன்றத்தை கூட்டி இதுதொடர்பில் விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கிறோம்.

அதேநேரம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, நத்தார் தாத்தா போன்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் தொகையை அறிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான வழியை அமைத்துக்கொண்டார். தற்போது வேறு கதைகளை தெரிவித்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நட்டஈட்டு தொகையை வழங்குவது என அரசாங்கத்துக்கு தெரியாமல் இருப்பதே இதற்கான காரணமாகும் என்றார்.

pre

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபாய் 5,000 போஷாக்குக் கொடுப்பனவு

December 16, 2025

சவால்களுக்கு மத்தியிலும், தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காக அரசாங்கம் முதலீடு செய்யும் என்ற உறுதியுடன், டிசம்பர் மாதத்திற்கான கர்ப்பிணித் தாய்மார்களுக்கான

au

 ஆஸ்திரேலிய தாக்குதல்; பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் குற்றவாளிகள்!

December 16, 2025

ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளது. யூதர்களுக்கு எதிரான இந்தத்

manda

ஊர்காவற்றுறை நீதிமன்றில் மண்டைதீவு புதைகுழி வழக்கு

December 16, 2025

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16.12.2025) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்

weat

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

December 16, 2025

கிழக்கிலிருந்து அடித்த ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும்

ti

டிக்டோக் நட்பு: இளம் பெண் கூட்டு வன்முறை: திருமலையில் சம்பவம்

December 16, 2025

திருகோணமலையில் சமூக ஊடகமான டிக்டோக் மூலம் அடையாளம் காணப்பட்ட 24 வயது திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் ரீதியான துன்புறுத்தலில்

abu

சூறாவளிக்குப் பிறகு குழந்தைகளை கடத்தல், சுரண்டல் அதிகரிப்பு

December 16, 2025

டித்வா சூறாவளிக்குப் பிறகு, குழந்தைகள் கடத்தல் மற்றும் சுரண்டலுக்கான சில கூறுகளின் முயற்சிகள் அதிகரித்து வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள்

arrest

ஐரோப்பா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

December 16, 2025

போலி ஆவணங்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஓமான்

mex

சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி

December 16, 2025

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய

chi'

தென் அமெரிக்க நாடான சிலியில் 35 ஆண்டுக்கு பின் மீண்டும் வலதுசாரி அரசு

December 16, 2025

சிலியின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் அதிக ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார். தென் அமெரிக்க

hong

தேசத்துரோக வழக்கு; ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபர் குற்றவாளி

December 16, 2025

ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபரும், ஜனநாயக போராளியுமான ஜிம்மி லாய், 78, சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட

au pa

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ – ஆஸி பிரதமர்

December 16, 2025

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என அந்நாட்டு பிரதமர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவில்

be

யுனைட்டெட் – போர்ண்மெத் போட்டி சமநிலையில்

December 16, 2025

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர்