இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னிலை சோசலிச கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை (01) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இந்நாட்டில் இஸ்லாம் மதம் பெரும்பான்மையாக இருந்து நாமல் ராஜபக்ஷவின் பெயர் நாமா ஸ்மித் என்று இருந்திருந்தால் அவர் இஸ்லாம் மதத்தைப் பாதுகாக்க நாம் அணிதிரள வேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார்.

அதேபோல், இந்நாட்டில் இந்து மதம் பெரும்பான்மையாக இருந்து அவரது பெயர் நாமலிங்கம் என்று இருந்திருந்தால் இந்து மதத்திற்காக என் உயிரையும் தியாகம் செய்வேன் என்றுதான் சொல்லியிருப்பார். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இவர்கள் ஆடும் ஒரு திட்டமிட்ட விளையாட்டே தவிர வேறொன்றுமில்லை.

இவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இனவாதத் தீயைப் பற்றவைக்கிறார்கள். யாழ் நூலகத்தை எரித்தார்கள் அது ஓய்ந்ததும் அளுத்கம தர்கா நகரை எரித்தார்கள்.

இப்போது எரிக்க அடுத்த இடத்தைத் தேடுகிறார்கள். இந்தத் தீயில் கருகிப் போவது சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையே தவிர ஆட்சியாளர்களின் வாழ்க்கை அல்ல.

இது அவர்களுக்கு ஒரு சாதாரண அரசியல் தீர்மானம் ஆனால் பொதுமக்களாகிய நமக்கு இது நம் பிள்ளைகளையும் உறவுகளையும் இழக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாகும்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பியானோ வாசிப்பதும் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு மூன்று சிங்களச் சொற்களைச் சொல்வதும் மட்டும்தான் செய்துகொண்டு இருக்கிறார்.

கடந்த காலங்களில் நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் எதைக் குறித்து அவர் பேசியிருக்கிறார்? சஜித் மற்றும் ராஜபக்சக்கள் தலைமையிலான இந்தத் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளால் நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

2019-இல் ஒரு ஹிட்லர் போன்ற ஆட்சியை உருவாக்க முற்பட்டபோது அது நாட்டுக்குப் பேரிடியாக அமையும் என நாம் எச்சரித்தோம். இன்று விவசாய மக்கள் அந்தப் பாதிப்பை அனுபவிக்கிறார்கள்.

இனிவரும் ஆண்டுகளில் நாட்டில் உருவாகும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப எமது கட்சித் தோழர்கள் தயாராக வேண்டும். கட்சிக்குள் இடதுசாரிச் சிந்தனையுள்ள புத்திஜீவிகளையும் வல்லுநர்களையும் நாம் உருவாக்க வேண்டும்.

தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் இடமளிக்காது ஒரு பலமான இடதுசாரி மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு