இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது; வெலிஓயா சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கடும் விசனம்

இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் அவ்வாறானதாக இல்லை என்பதற்கு மணலாறு (வெலிஓயா) ஒரு உதாரணமாகும். அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது.

மொழி உரிமை மிகமுக்கியம் எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் அவ்வுரிமை மறுக்கப்படுகின்றது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், அக்கூட்டம் வழமைக்கு மாறாக தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே நடைபெற்றமை குறித்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்றது. மணலாறு தற்போது வெலிஓயா எனப் பெயர் மாற்றப்பட்டிருப்பது குறித்து அனைவருக்கும் தெரியும். இந்தக் கூட்டத்தில் வவுனியா வடக்கு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபை என்பவற்றின் தவிசாளர்கள் கலந்துகொள்வது வழமையாகும். ஒவ்வொரு முறையும் இக்கூட்டத்துக்கு வவுனியா வடக்கு தவிசாளர் கிருஷ்ணவேனி சமுகமளிப்பார்.

இக்கூட்டத்தில் பங்கேற்பவர்களில் அநேகமானோர் தமிழர்களாவர். அதன்படி இந்தக் கூட்டம் இதுவரை காலமும் மொழிபெயர்ப்புடனேயே நடைபெற்றுவந்தது. ஆனால் இம்முறை இக்கூட்டம் நடைபெறவதற்கு முதல்நாள் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக சகலரும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

இத்தகைய பின்னணியில் மறுநாள் இந்தக் கூட்டம் நடைபெற்றபோது வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளருக்கு வழமையாக ஆசனம் ஒதுக்கும் இடத்தில் ஆசனம் ஒதுக்கப்படவில்லை. மாறாக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருடன் அமரமுடியாது எனவும், ஆகவே கீழே அமருமாறும் கூறப்பட்டது.

இருப்பினும் இருக்கையை வழமைக்கு மாறாக மாற்றமுடியாது எனக் குறிப்பிட்ட தவிசாளர் மேடையிலேயே அமர்ந்தார். அதன் பின்னர் இக்கூட்டம் முழுமையாக தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே நடைபெற்றது. மொழிபெயர்ப்பு கோரிய போதிலும், அது வழங்கப்படவில்லை. ஆகையினால் தவிசாளர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

தேசிய சுதந்திரதினக்கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட தாம் அனைவரும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவது கிடையாது எனவும், மாறாக நாம் நடத்திய போராட்டமே இனவாதப் போராட்டம் எனவும் கூறியிருந்தார்.

அவ்வாறிருக்கையில் வவுனியா வடக்கு தவிசாளரையும், அங்கிருந்த மக்களையும் புறக்கணித்து, மொழிபெயர்ப்பு இல்லாமல், கூட்டத்தைத் தனிச்சிங்களமொழியில் நடத்தியமையை எவ்வாறு வர்ணிப்பது என்பதே இப்போது எமக்கு இருக்கும் கேள்வியாகும். இதனை இனவாதம் என்பதா? இல்லாவிடின் வேறு எவ்வாறு கூறுவது? எனக் கேள்வி எழுப்பினார்.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை