இந்தியா – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நேற்று(ஜன. 26) கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

’அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என குறிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

“நேற்று(ஜன. 26) ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை மக்கள் ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று அழைக்கிறார்கள்.

இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள மக்களுக்கு பெரும் வாய்ப்புகளை கொண்டு வரும். இது உலகின் இரண்டு முக்கிய பொருளாதாரங்களுக்கிடையேயான கூட்டாண்மையின் சிறந்த உதாரணம்,” என்று வர்த்தகம் ஒப்பந்தம் குறித்து உரையாற்றியபோது மோடி தெரிவித்தார்.

மேலும், இந்த ஒப்பந்தம் இந்திய உற்பத்தித் துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கும் என்றும் பிரதமர் கூறினார்.

குடியரசு நாள் விழாவை ஒட்டி சிறப்பு விருந்தினர்களாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான்டா் லெயன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டப்பூர்வ ஆய்வுகளை முடித்த பின், இந்த ஒப்பந்தத்தின் முறையான கையெழுத்து நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நடைபெற்றுவரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சின் அம்சங்கள், இருதரப்புக்கும் இடையே உத்திசார்ந்த பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தான நிலையில், அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவுளி, காலணி உள்பட சுமார் 90 சதவீத பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது