அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் உலக நாடுகளும் கலக்கத்தில் உள்ளன. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள் தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய கடல் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.
இதனால் உலக வரலாற்றில் கச்சா எண்ணெய் விலை ஒரேநாளில் 25% உயர்ந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 115 டாலராக உயர்ந்துள்ளது. இதன் விலை 150 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். இதனால் எண்ணெய் அதிகம் கொள்முதல் செய்யும் இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ. 92.20 என வர்த்தகம் தொடங்கிய நிலையில் ரூ. 92.33 ஆகக் குறைந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் 92.528 ஆக மேலும் குறைந்திருந்தது.