கிளிநொச்சி-இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(12.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய கடற்றொழிளார்களையும் தொழிலுக்கு பயன்படுத்திய மீன்பிடி படகினையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.