ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் ஆகாஷ், மாதுளன்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ், வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், ஆகிய இருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட மேற்கிற்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடி 9.10 என்ற சராசரியுடனும் 3.26 என்ற கட்டுப்பாடான பந்துவீச்சுடனும் விக்னேஸ்வரன் ஆகாஷ் 20 விக்கெட்களைக் கைப்பற்றி தனது பந்துவீச்சு ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்தத் தொடரில் இரண்டு அணிகளையும் சேர்ந்த வேறு எவரும் 10 விக்கெட்களை எட்டவில்லை.

இரண்டாவது அதிகூடிய 9 விக்கெட்களை இலங்கையைச் சேர்ந்த செத்மிக்க செனவிரட்ன வீழ்த்தியிருந்தார்.

யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் சுழல்பந்துவீச்சாளரான ஆகாஷ், 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்திலும் சிறப்பாக பந்துவீசுவார் என நம்பப்படுகிறது.

குகதாஸ் மாதுளன் இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடி 3 விக்கெடகளைக் கைப்பற்றினார்.

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளரான குகதாஸ் மாதுளனுக்கு இந்தத் தொடரில் கூடுதல் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சாரவும் உப தலைவராக கிங்ஸ்வூட் வீரர் கவிஜ கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்ற ரமிரு பேரேரா, புலிஷ குணதிலக்க, சேனுஜ வேக்குனகொட, ஜேசன் பெர்னாண்டோ ஆகிய நால்வரும் ஆசிய கிண்ணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெறவில்லை.

அவர்களுக்கு பதிலாக சமரிந்து நெத்சர, துல்னித் சிகேரா, கித்ம விதானபத்திரன ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இளம் வீரர்களைத் தயார் படுத்தும் களமாக 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அமையவுள்ளது.

red

மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

December 10, 2025

நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கட்டிடம்

man

பருவமழை; மன்னாருக்கு முன்னெச்சரிக்கை

December 10, 2025

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை சற்றுமுன் விடுத்துள்ளது.

un

மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

December 10, 2025

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை

jan

பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் குறைபாடுகளை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி

December 10, 2025

நாட்டின் பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் நீண்டகால குறைபாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். இந்திய ஊடகம்

wat

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர் குளத்தில் மூழ்கி பலி!

December 10, 2025

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி

mari

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திட்டமிட்ட நிதி நிவாரணம் அறிவித்தது போன்றே வழங்கப்பட வேண்டும்

December 10, 2025

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை

sou

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நன்கொடை

December 10, 2025

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக

kos

71 குடும்பங்கள் வெளியேற்றம்

December 10, 2025

மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)

jail

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 12 பேர் கைது

December 10, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்

ila

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

December 10, 2025

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்

fr

ஜனாதிபதியின் செயலாளருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

December 10, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லேம்பெர்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

wo

பொதுமக்கள் மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்

December 10, 2025

பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின்