அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை, தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மிகமோசமான இயற்கைப் பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு பிரதியமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துக் கண்டனத்தை வெளிப்படுத்தியும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்துடன் இணைந்து சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது, குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரையும் இலக்குவைத்து சமூகவலைத்தளங்களில் மிகமோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் இலங்கை அரசாங்கத்தினால் பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அச்சட்டத்தின் 5 ஆம் சரத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள் நெருக்கடி நிலையின்போது பகிரப்படும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் சுனில் வட்டகல இவ்வாறு கூறினாலும், அவசரகாலச்சட்டமானது விமர்சனங்களையோ அல்லது கருத்துக்களையோ ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்தானது அனர்த்த முகாமைத்துவம் எனும் போர்வையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.

நாட்டில் நெருக்கடி நிலவும் வேளையில் உரிய நேரத்தில் சரியானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான செய்திகளை வழங்கவேண்டிய மிகப்பாரிய பொறுப்பு ஊடங்களுக்கு உண்டு.

அதேபோன்று உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்துக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்