அல்பெர்டா மாகாணத்தின் முதல்வர் டானியல் ஸ்மித்(Danielle Smith) தனது அரசு 2050ஆம் ஆண்டுக்குள் மாகாண மக்கள்தொகையை 1 கோடியாக (10 மில்லியன்) இரட்டிப்பாக்கும் இலக்கை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது என்று அறிவித்தது.
மேலும், 2024ஆம் ஆண்டில் பல முறை, 1,06,000 மக்கள் வசிக்கும் ரெட் டீர்(Red Deer) நகரம் 10 இலட்சம் மக்கள்தொகையுடன் விரிவடைய வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
குடியேற்றம் குறித்த பொதுமக்களின் மனநிலையும் மாறியுள்ளது. கனடா முழுவதும், சமீப ஆண்டுகளில் குடியேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது எனவும் இது வீடமைப்பு மற்றும் சில பொது சேவைகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அல்பெர்டாவின் பட்ஜெட் நிலையும் மாற்றமடைந்துள்ளது. எதிர்பார்த்ததைவிட குறைந்த எண்ணெய் விலைகள், ஸ்மித் குடியேற்றத்தை ஆதரித்து வலியுறுத்திய காலத்தில் இருந்த 8.3 பில்லியன் டொலர் அதிகப்படியான வருவாயை இவ்வாண்டு பெரிய பற்றாக்குறையாக மாற்றியுள்ளன. மேலும், அடுத்த வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ள பட்ஜெட்டிலும் கூடுதல் நிதிப் பற்றாக்குறை இருக்கும் என அவர் முன்கூட்டியே எச்சரித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகளாக, புதிய குடியேற்றவர்களின் வருகையைவும், அவர்கள் பெறும் சேவைகளையும் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அவர் முன்மொழிந்துள்ளார். ஆனால் அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, இவ்வருடம் இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்புகள் மூலம் தனது யோசனைகளை அல்பெர்டா மக்கள் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ அவர் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்டோபர் 19ஆம் தேதி குடியேற்றம் தொடர்பாக ஐந்து தனித்தனி வாக்குச் சீட்டு கேள்விகள் இடம்பெறுமென ஸ்மித் நிர்ணயித்துள்ளார். மேலும், “Alberta Next” குழுக்கள் ஆராய்ந்த பல அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்த நான்கு கேள்விகளும் சேர்க்கப்பட்டுள்ளன .