ஜனாதிபதி அநுரகுமார சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகின்ற போதிலும் அது அவ்வாறில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி ஏற்ற காலம் முதல் இவ்வாறு கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஜே.வி.பியின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு மேலே இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரச்சினையின் போதும், இரத்தினபுரியில் இடம்பெற்ற பிரச்சினையயின் போதும் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நேரில் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் சட்டத்திற்கு மேல் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜனாதிபதி அநுர எந்த நேரத்திலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என மந்திரம் ஒதி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கூறுவது போல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ரண்வலவின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரன்வல மற்றும் இரத்தினபுரி சம்வங்களின் போது சட்டம் எவ்வாறு வளைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயமே என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரகலய போராட்டத்தில் பணம் பெற்றவர்களுக்கு நாமல் விடுக்கும் எச்சரிக்கை
கோட்டாபய அரசாங்கத்தை விரட்டுவதற்கு முன்னெடுப்பட்ட அரகலய போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்த பெறப்பட்ட பணம் தொடர்பில் எமது அரசாங்கத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளின் அரசாங்கங்களை மாற்ற பணம் எவ்வாறு முதலீடு செய்யப்பட்டது என ஆராய்வதாக அறிவித்திருந்தார்.
மேலும் ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி திட்டம் (United Nations Development Programme) மூலம் பணம் எவ்வாறு இவற்றுக்கு முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைத்தது உண்மையாகும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் வாகனங்கள் மற்றும் வீடுகளை வாங்கினர்.
சிலர் வெளிநாடுகளில் வசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களில் தெரியவந்துள்ளது என்றும் கூறினார். போராட்டத்தின் பின்னர் ஒரு பகுதியினர் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களாகினர்.
சிலர் வாகனங்கள் மற்றும் வீடுகளை பெற்றுக் கொண்டனர்.ஆனால் அதில் பாதிக்கப்பட்ட பன்னிரண்டு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.