அரசாங்கம் தற்போதைக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்போவதில்லை

கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துவரும் அரசாங்கம் இந்நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தினால் படுதோல்வியடையும் என்பது தெரியும். அதனால் அரசாங்கம் தற்போதைக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் மக்களின் நன்மதிப்பை தற்போது இழந்து வருகிறது. இதற்கு உதாரணம்தான், இடம்பெற்றுவரும் கூட்டுறவு சங்க தேர்தல்களாகும். அண்மையில் இடம்பெற்ற குருணாகல் மாவட்ட கூட்டுறவு சங்க தேர்தல் அனைத்திலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. நாடு பூராகவும் இந்த நிலையே இருந்து வருகிறது. தேர்தல்களுக்கு பயப்படப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்தாலும், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு எந்த தேவையும் இல்லை.

ஏனெனில் தற்போதைய நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தினால், அரசாங்கத்துக்கு தோல்வியல்ல, படுதோல்வியே ஏற்படும் என்பதை அரசாங்கம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. அதனால் தேர்தல் வரைபை அரசாங்கம் சுறுட்டிக்கொண்டிருக்கிறது. மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் ஆணையை இல்லாமலாக்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம் தற்போது ஒருசில நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டே முன்னுக்கு செல்கிறது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதாக கர்தினால் ஆண்டகைக்கு ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார். அரசாங்கத்துக்கு ஒருவருடம் கடந்துள்ளபோதும் புதிய அரசியல் யாப்பு அமைப்பது தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் வாக்குறுதி வழங்கி இருந்தது. இந்த வருடம் ஏப்ரல் 22ஆம் திகதிக்கு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெறும் இரண்டாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்வாகும்.

அப்படியானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எங்கே? பிரதான சூத்திரதாரியை மறைத்து வைத்திருப்பதாகவும், ஆட்சிக்கு வந்ததுடன் அதனை வெளிப்படுத்துவதாகவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாகும் இவர்கள் அன்று தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் எதுவும் இடம்பெறவில்லை.கர்தினால் ஆண்டகையையும் அரசாங்கம் ஏமாற்றி இருக்கிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கடந்துள்ளபோதும் இவர்களினால் நாட்டுக்கு அபிவிருத்தியோ, மறுமலர்ச்சியோ அல்லது வேறு ஏதாவது மாற்றங்களோ இடம்பெற்றுள்ளதா என பார்த்தால், எதுவும் காணக்கூடியதாக இல்லை. அதனால் நாட்டை முன்னோக்கு கொண்டுசெல்ல இந்த அரசாங்கத்துக்கு எந்த சக்தியும் இல்லை. அதற்காக அவர்களிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவதையும் காணக்கூடியதாக இல்லை.

மாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடங்களை அரங்கேற்றி வருகிறது. பாராளுமன்ற நாடகம், சபாநாயகர் நாடகம் அரங்கேறியுள்ள நிலையில், அடுத்ததாக தற்போது ஏப்ரல் மாதம் வரும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றுவார்கள். அதனால் தயவு செய்து இந்த நாடகத்தை அரங்கேற்றாமல், வாக்குறுதி அளித்த பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்