அரசாங்கம் உருவாக்கிய ‘Rebuilding Sri Lanka’ நிதியம் உண்மையில் இருக்கிறதா?

‘டித்வா’ சூறாவளிக்குப் பின்னர் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் உருவாக்கிய ரீபில்டிங் சிறிலங்கா ‘Rebuilding Sri Lanka’ நிதியம் உண்மையில் இருக்கிறதா?

அல்லது அது வெறும் விளம்பர முயற்சியா? என பிபிசி வெப்தளம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மேற்கொண்ட தகவல் அறிதலில் ஜனாதிபதி அலுவலகமும் நிதி அமைச்சும் வழங்கிய பதில்கள் பல சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பிபிசியின் RTI வெளிப்படுத்திய நிதியின் உண்மை நிலையை காட்டும் 8 முக்கிய அம்சங்கள்:

ஜனவரி 23ஆம் திகதி பிபிசி வெப்தளம் சமர்ப்பித்த RTI கோரிக்கைக்கு பெப்ரவரி 24ஆம் திகதி கிடைத்த பதில்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்கள் வெளிவந்துள்ளன:

‘Rebuilding Sri Lanka’ நிதியம் தங்களுக்கு கீழ் இல்லை, அது ஜனாதிபதி அலுவலகத்தின் பொறுப்பில் உள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான ஒரு நிதியம் உருவாக்கப்பட்டதா என கேட்டபோது, “தேவையான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன” என ஜனாதிபதி அலுவலகம் பதிலளித்துள்ளது.

அதாவது, மூன்று மாதங்கள் கடந்தும் சட்டபூர்வமாக நிதியம் நிறுவப்படவில்லை.

நாட்டில் நிறுவப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவச் சட்டத்திற்கு பதிலாக, புதிய நிதிக்காக தனி மசோதா தயாரிக்கப்படுவதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சட்ட அடிப்படையின்றி பொதுமக்கள் நிதி திரட்டுவது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. நிதி இன்னும் நிறுவப்படாததால், அதற்கான கணக்காய்வு நடைமுறை குறித்த தெளிவான பதில் அரசிடம் இல்லை.

இணையதளத்தில் பில்லியன் கணக்கில் நிதி காட்டப்பட்டாலும், RTI பதிலில் சரியான நிதி எவ்வளவு என வழங்கப்படவில்லை. ஜனாதிபதி ஊடக பிரிவு “முகாமைத்துவ குழு” பற்றி கூறியிருந்தாலும், RTI பதிலில் குழு நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களின் தகவல் கோரிக்கையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிக்கே அனுப்பியிருந்தோம்.ஆனால் 2026 ஜனவரி 30ஆம் திகதி கிடைத்த பதலில், ‘Rebuilding Sri Lanka’ நிதியம் தொடர்பான தகவல்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பொறுப்புப் பரப்பில் உள்ளன என பதில் அனுப்பியிருந்தது.

அதனால், அந்த தகவல் கோரிக்கை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தெளிவாகத் தெரியவருவதாவது, ‘Rebuilding Sri Lanka’ என்ற நிதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இல்லை என்பதே ஆகும்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய