அரசாங்கத்துக்குப் பொதுபல சேனா கடும் எச்சரிக்கை

செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் முன்னெடுத்து வரும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை பொதுபல சேனா அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

23ஆம் திகதி திங்கட்கிழமை இராஜகிரியவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்ல என்றும், நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது பிக்குகளின் வரலாற்று ரீதியான கடமை என்றும் தெரிவித்தார்.

சோழர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற பலத்த ஆக்கிரமிப்பாளர்களால் கூட சிங்கள பிக்குகளின் வரலாற்றையோ அல்லது அவர்களின் செல்வாக்கையோ சிதைக்க முடியவில்லை என்பதை அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பாதுகாப்பும் பௌத்த மதமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிக்குகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் முயற்சிகளையும் சாடினார். தற்போதைய அரசாங்கம் மாத்திரமன்றி, இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களின் காலத்திலும் பிக்குகளின் அரசியல் பங்களிப்பு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

தமது உரிமைகள் மற்றும் வரலாற்று ரீதியான வகிபாகத்தை உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரின் காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஹன்சாட் (Hansard) அறிக்கைகளின் முக்கிய பகுதிகளை அவர் இதன்போது சான்றாக முன்வைத்தார்.

தமக்கு எதிராகப் பாரியளவில் அரசியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாகத் தமக்குள்ள அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் உண்மைத் தகவல்களைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.

“எம்மை இனவாதிகள் என முத்திரை குத்தி எமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை நிறுத்த வேண்டும். எம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள், அதை விடுத்து இழிவான முறையில் அவதூறு பேசாதீர்கள்” என அவர் சவால் விடுத்தார்.

மேலும், தமக்கெதிரான சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தற்போது தாம் தங்கியிருக்கும் விகாரையைப் புனரமைப்பதற்கும் போதிய நிதி வசதி இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இதற்காக “ஜாதிக பின்கெட” (தேசிய புண்ணியத் தராசு) எனும் பெயரில் வங்கி கணக்கொன்றை அறிமுகப்படுத்தினார். விருப்பமுள்ளவர்கள் 100 ரூபாவையேனும் அந்த கணக்கில் வைப்பிலிட்டு இந்த நீதிப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு