அமரகீர்த்தி கொலை வழக்கு; இரு தரப்பிலிருந்தும் மேன்முறையீடு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு தீர்ப்பிற்கு எதிராக அரச தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு என்பன மேன்முறையீடு செய்யத் தீாமானித்துள்ளன.

கம்பஹா மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரும், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, நீதிபதிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்வில் இருந்த மூன்று நீதிபதிகளில் இருவர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தனர்.

ஆனால் அமர்வின் தலைவர் நீதிபதி, அனைத்து குற்றச்சாட்டுகளிலும் சந்தேக நன்மை வழங்கி அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

இந்த சூழ்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதிகள் என வலியுறுத்தி மேல் நீதிமன்றத்தை அணுகத் தயாராகி வருகின்றனர்.

அதேவேளை, இந்தக் குற்றத்தில் மேலும் பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியிருந்தது என்ற நிலைப்பாட்டில் சட்டமா அதிபர் உள்ளார்.

சட்டப்படி வழங்கப்பட்டுள்ள 28 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்படுவதாக துணை சட்டமா அதிபர் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளும் சிறை நிர்வாகம் மூலம் மேன்முறையீட்டு நடவடிக்கைகளுக்கான சட்ட உதவிகளை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.