அனர்த்தநிலை குறித்து ஆராய பிரதி அமைச்சர் பிரதீப் கள விஜயம்

தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று புதன்கிழமை (03) அப்பகுதிகளில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆய்வு செய்தார்.

ஹட்டன் TVTC தொழிற்பயிற்சி நிலையத்திற்குச் சென்ற பிரதி அமைச்சர், அங்குள்ள மாணவர்களை சந்தித்து அவர்களது குடும்பங்கள் அனர்த்தத்தால் எதிர்நோக்கும் நிலைமைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மாணவர்களின் குடும்பத்தினருக்கான அவசர நிவாரணங்கள் தாமதமின்றி வழங்கப்படுவதற்கான வழிமுறைகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்கள் எதிர்நோக்கும் கல்வி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்து பிரதி அமைச்சர் உரிய அதிகாரிகளுடன் அங்கு இருந்தபோதே தொலைபேசியில் கலந்துரையாடி உடனடி தீர்வுகளை அறிவுறுத்தினார். அதனுடன், கற்கைநெறி விருத்தி, தரநிலைகள் உயர்த்தல் மற்றும் மாணவர் உள்ளீர்ப்பு அதிகரிப்பு தொடர்பான விவகாரங்களும் அதிகாரிகளுடன் ஆராயப்பட்டன.

பின்னர் தலவாக்கலை–வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டப்பகுதிக்குச் செல்லும் வழியில் சமீபத்தில் ஏற்பட்ட மண்சரிவு பாதிப்புகளும் பிரிதி அமைச்சர் பிரதீப் அவர்களால் நேரில் பார்வையிடப்பட்டன. மண்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மண் அகற்றும் பணிகள், வீதிகள் மறுசீரமைப்பு மற்றும் மக்களுக்கு பாதுகாப்பான பயண வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டம் மற்றும் மடகும்புர தெற்கு தோட்டப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தால் தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை பிரதி அமைச்சர் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் உணவு, நீர், உடைகள், குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருட்கள் மற்றும் சுகாதார வசதிகள் உடனடியாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாக உறுதியளித்தார்.

அனர்த்தத்தில் சிக்கிய ஒவ்வொருவரின் பாதுகாப்பும் நலனும் எங்களின் முதன்மை. அரசாங்கம் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஒருமித்த முறையில் நிவாரண நடவடிக்கைகளை செயற்படுத்துகிறது. யாரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

தலவாக்கலை–வட்டகொடை பகுதி மக்கள் எதிர்நோக்கும் உடனடி சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களைத் தவிர்க்க வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதி அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த கள விஜயத்தின் போது, பிரதி அமைச்சருடன், கொட்டகலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் யாகுலமேரி, கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் சுதர்சன், அகரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்களான கவிஷான், மற்றும் பிரபு, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் றொஹான், பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர்களான வசந்தமூர்த்தி மற்றும் சிவநேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

po

உதவித் தொகையை அதிகரித்த பிரித்தானியா

December 6, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள்

veh

வாகன பாவனை தொடர்பில் எச்சரிக்கை

December 6, 2025

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என

thera

ஜனாதிபதி – தேரர் சந்திப்பு!

December 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி

pra

நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

December 6, 2025

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில்

dssdvds

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு அபராதம்

December 6, 2025

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி

pa hi

இந்து மத மாணவியர் பாகிஸ்தான் அரச பள்ளியில் கட்டாய மத மாற்றம்?

December 6, 2025

பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் இந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம்

sa

சிங்கப்பூர் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போன், வாட்ச்’ பயன்படுத்த கட்டுப்பாடு?

December 6, 2025

சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், ‘ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்’ பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில்

hea

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

December 6, 2025

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும்,

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச