அதிகளவு மக்கள் செல்வாக்கு – மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா?

கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

குழுக்கள், தெரிவுக் குழுக்கள் என்று பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி, மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறேன்.

அரசாங்கத்திற்கு 65% மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கூட்டுறவு வாக்குகளை கருத்திற் கொள்வதில்லை என்றால் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் காணப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கிறேன். அதை நேரடியாகவே தெரிவிக்கின்றேன்.

உலகின் ஜனநாயக நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது ஊழல் மற்றும் இலஞ்சத்தை குறைத்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையிலாகும்.

இவர்களினது பதவிக்காலம் முடிந்த பின்பு இவர்களுக்கு ஒருவகையில் சமூக பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதும் இதில் ஒரு அம்சமாக அமைந்து காணப்படுகின்றன.

இந்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுதியாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து அக்கறை காட்டும் அரசாங்கம், 7 இலட்சத்து 50 ஆயிரம் ஓய்வு பெற்றவர்களின் ஊதியங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவற்றதாக காணப்படுகின்றன.

பி.சி. பெரேரா குழுவின் பரிந்துரைப்படி அரச ஊழியர்களுக்கு 60% சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதில் ஆசிரியர், அதிபர், ஆலோசகர் சேவைகளுக்கு அது வழங்கப்படாமல் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது.

சுபோதனி குழுவின் 20% அதிகரிப்பு 2022 ஜனவரி 1-ஆம் திகதியிலிருந்து பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால், ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

ஜனாதிபதி ஓய்வூதியர்கள் தேசிய மாநாட்டில் இந்த பிரச்சினைகளை தீர்த்துத் தருவேன் என்று கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2025-2027 சம்பள அதிகரிப்பு செய்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்ற 1 இலட்சத்து 54 ஆயிரம் பேருக்கு எந்த நிவாரணமும் இல்லை.

2025 ஏப்ரல் 1-க்கு முன் அதாவது, ஜனவரி-மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகள் கிடைத்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு சரிசெய்யப்படாமல் போனதால் அவர்கள் கஷ்டத்தில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

10,000 சம்பள அதிகரிப்பை ஓய்வூதியத்தில் இணைக்கும் செயல்முறையை கோட்டாபய அரசாங்கம் இரத்துச் செய்த பிறகு, இந்த அநீதியை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லாமல் பல ஓய்வூதியர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு