பல ஹிட் படங்களை இயக்கியிருப்பவர் தான் பேரரசு. அவர் விஜய் மற்றும் அஜித் என இருவரையும் வைத்து படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் இடையே இருக்கும் வித்யாசங்கள் பற்றி இயக்குனர் பேரரசு பேசியிருக்கிறார்
விஜய் மற்றும் அஜித் என இருவரையும் வைத்து ஹிட் கொடுத்த ஒரு சில இயக்குனர்களில் பேரரசுவும் ஒருவர். விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் பேரரசு. அப்படத்தின் வெற்றி பற்றி அனைவரும் அறிந்தது தான். அதைத்தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து சிவகாசி என்ற படத்தை கொடுத்தார். அப்படமும் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.
விஜய்க்கு இரு மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்த பேரரசு அடுத்ததாக அஜித்துடன் இணைந்தார். அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தை இயக்கினார். என்னதான் அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதுவும் ஒரு வெற்றிப்படமாகவே தான் அமைந்தது. இவ்வாறு அடுத்தடுத்து அஜித் மற்றும் விஜய் என இருவரையுமே இயக்கியிருக்கும் பேரரசு சமீபத்தில் விஜய்க்கும் அஜித்திற்கும் இருக்கும் ஒரு வித்யாசம் பற்றி பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, விஜய் ரொம்ப சைலண்டா இருபாருனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் அஜித் செம ஜாலி டைப். அனைவரிடமும் ஜாலியா விளையாடிட்டு பேசிட்டு இருப்பாரு. எதைப்பற்றியும் தலையிடமாட்டாரு, இயக்குனரை நம்பி விட்டுடுவாரு. ஆனால் விஜய் பாடல்கள் விஷயத்தில் ரொம்ப கவனமா இருப்பாரு. அவரிடம் டியூன் போட்டு காட்டிட்டு தான் ஓகே பண்ணனும். பாடலில் மிக மிக கவனமா இருப்பாரு விஜய். மற்றபடி இருவருக்கும் பெரிய வித்யாசம் எதுவும் இல்லை என்றார் பேரரசு.
இந்நிலையில் விஜய்யுடன் பழகிய மற்றும் பணியாற்றிய அனைவரும் அவர் ரொம்ப சைலன்ட் என்று தான் சொல்லியிருக்கின்றனர். ஆனால் அஜித் மிகவும் ஜாலியாக கலகலவென இருப்பார் என பேரரசு சொன்னது தான் ஒரு சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. குறிப்பாக இன்றைய காலகட்டத்து இளம் ரசிகர்கள், என்னது அஜித் செட்டில் ஜாலியாக இருப்பாரா ? என கேட்கின்றனர். ஏனென்றால் சமீபகாலமாக அஜித் மிகவும் அமைதியாக சீரியஸான மோடிலேயே இருக்கின்றார்.
ஆனால் முன்பெல்லாம் அஜித் பேரரசு சொல்வது போல செம ஜாலியான ஆளாகவே இருந்துள்ளார். மங்காத்தா படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்தாலே அஜித்எப்படிப்பட்ட ஜாலியான ஒரு மனிதர் என்பது தெரிய வரும். அப்படிப்பட்ட அஜித் தான் தற்போது ரொம்ப சீரியஸான ஒரு மனிதராக மாறியிருக்கிறார். தற்போதும் மங்காத்தா படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் நெகிழ்ச்சியாக உணர்ந்து வருகின்றனர்.
அஜித்தை மீண்டும் அதுபோல ஒரு ஜாலியாக மனிதராக பார்க்கவேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆனால் விஜய் ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப சைலண்டான ஒரு ஆளாகவே தான் இருந்து வந்துள்ளார். மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் மட்டுமே தான் விஜய் ஜாலியாக இருப்பார் என சொல்லப்படுகின்றது. மற்றபடி ஷூட்டிங் ஸ்பாட்டிலெல்லாம் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் விஜய் இருப்பாராம். அஜித் முன்பெல்லாம் விஜய்க்கு நேர் மாறான ஒரு ஆளாக ஜாலியாக இருந்திருக்கின்றார்.