FACETS Sri Lanka-உத்தியோகபூர்வ நிலைச்சொத்து அனுசரணையாளராக ஜோன் கீல்ஸ் !

கொழும்பு, இலங்கை – 18 நவம்பர் 2025

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறும் முதன்மையான சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி நிகழ்வான FACETS Sri Lanka 2026 க்கு உத்தியோகபூர்வ நிலைச்சொத்து (Real Estate) அனுசரணையாளராக தான் கைகோர்த்துள்ளமை குறித்து, இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய, மிகப் பாரிய மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலைச்சொத்து நிர்மாணிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் (John Keells Properties JKP) அறிவித்துள்ளது.

“காலத்தால் அழியாத மரபுகள்” (Timeless Legacies) என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு நிகழ்வு இடம்பெறுவதுடன், கைவினைத்திறன், நம்பிக்கை, மற்றும் காலத்தால் அழியாத மரபு ஆகிய பண்புகளுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த இரு துறைகளினதும் காலம் காலமாகத் தொடரும் மதிப்பைக் கொண்டாடும் வகையில் இது அமைந்துள்ளது.

ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனத்தின் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவருமான நதீம் ஷம்ஸ் அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவிக்கையில்:

“ஆபரணம் மற்றும் நிலைச்சொத்து ஆகிய இரண்டும் எப்போதுமே ஆடம்பரம் என்பதற்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுவதுடன், காலத்தால் அழியாத நிரந்தரம் என்பதற்கு உவமானமாகக் காணப்படுகின்றன. இரத்தினக்கல்லும், இல்லமும் தனித்துவமான வரலாறுகள், மதிப்பு, மற்றும் உணர்வு ஆகியவற்றைச் சுமப்பதுடன், அவை தலைமுறை தலைமுறையாக கைமாறி வருகின்றன. FACETS நிகழ்வில் காட்சிப்படுத்தப்படுகின்ற தலைசிறந்த படைப்புக்களைப் போலவே, காலத்தால் அழியாத வாழ்விடங்களை ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிர்மாணித்து வருகின்றது.”

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்தின் தலைவர் அக்ரம் காசிம் அவர்கள் கருத்து வெளியிடுகையில்:

“மகத்துவம், கைவினைத்திறன், மற்றும் காலத்தால் அழியாத மதிப்பு என FACETS நிகழ்வை வரையறுக்கும் தனித்துவமான கோட்பாடுகளை ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனமும் காண்பித்து வருகின்றது. உத்தியோகபூர்வ நிலைச்சொத்து கூட்டாளராக அது கைகோர்த்துள்ளமை, உத்வேகமளிக்கும் வாழ்விடம் மற்றும் தலைமுறை தலைமுறையாக பொக்கிஷமாகப் போற்றப்படும் ஆபரணம் ஆகியவற்றுக்கு இடையிலான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், எமது நிகழ்வுக்கு வருகை தருகின்ற பார்வையாளர்கள் அனைவருக்கும் கிடைக்கும் அனுபவத்தையும் மேம்படுத்துகின்றது.”

இலங்கையின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி நிகழ்வாக சர்வதேச அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள FACETS Sri Lanka, சர்வதேச கொள்வனவாளர்கள், சேகரிப்பாளர்கள், மற்றும் ஆர்வலர்களை ஈர்த்து வருகின்றது. இவ்வாண்டில் இக்கண்காட்சிக்கு புதிய பரிமாணத்தை ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் ஏற்படுத்தவுள்ளதுடன், கலைநயத்தை கட்டிடக்கலையுடனும், அழகுநயத்தை முதலீட்டுக்கான மதிப்புடனும் ஒன்றிணைக்கின்றது.

கொழும்பிலுள்ள Cinnamon Life City of Dreams ல் 2026 ஜனவரி 3-5 வரை FACETS Sri Lanka 2026 நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், இலங்கையின் மிகச் சிறந்த கைவினைத்திறன், புத்தாக்கம், மற்றும் உலகளாவிய ஈர்ப்பு ஆகியவற்றை ஒன்றுசேர்க்கவுள்ளது.

By C.G.Prashanthan

pa

இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கிய இந்தியர் மறைவு

November 18, 2025

இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கியவர் என்ற பெருமைக்குரியவரும், இந்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை

dolf

மன்னாரில் தென்பட்ட டொல்பின்கள் இராமநாதபுரம் சென்றன?

November 18, 2025

மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு

wome

2025 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

November 18, 2025

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் பெண்களுக்கு

Man on the chair in Handcuffs. Rear view and Closeup ,Men criminal in handcuffs arrested for crimes. With hands in back,boy  prison shackle in the jail violence concept.

ஏழாலையில் பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது

November 18, 2025

யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீட்டர்கள் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு தயாரிப்பதற்காக

parliament-of-sri-lanka-1-1

கொடுப்பனவை இழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

November 18, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1971 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற

ha

பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள்; உள்நாட்டு பாதணி உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு!

November 18, 2025

கல்வி அமைச்சினால் தற்போது 250க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மையமாகக் கொண்டு, பாடசாலைச் சப்பாத்து கொள்வனவிற்காக வழங்கப்படும் வவுச்சர்

tr

புத்தர் சிலை விவகாரம்; தடயவியல் பொலிஸார் கள ஆய்வு

November 18, 2025

திருகோணமலை கடற்கரை பகுதிக்கு சென்ற தடயவியல் பொலிஸார் புத்தர் சிலை விவகாரம், அதன் சேத நிலைவரம் தொடர்பில் கண்டறிய, கள

anan

80 பாதாள உலக செயற்பாட்டாளர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

November 18, 2025

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18)

sev

கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தி தொடர்பில் முக்கிய தகவல்

November 18, 2025

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த

air

விமான நிலையத்தில் பயணிகளால் கைவிடப்பட்ட பொதிகளில் சிக்கிய மர்மம்

November 18, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளால் விட்டுச் செல்லப்பட்ட பொதிகளில் இருந்து போதை பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளால்

ai

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று ஆண்களிடம் அதிகரிப்பு

November 18, 2025

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீப தரவுகளின் படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள்

po

அஞ்சலை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுப்பு

November 18, 2025

இலங்கை அஞ்சல் வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்பொன்று இலங்கை தபால்