பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது உரிமைகளுக்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். […]
250 இளநீர் கிராமங்கள் உருவாக்க திட்டம்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “Ceylon King Coconut Village” தேசிய திட்டம் இன்று(02) குருநாகல் மாவட்டத்தின் தெங்கு பயிர்ச்செய்கை சபைக்குச் சொந்தமான மஹாயாய தோட்ட வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டின் இளநீர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தி உற்பத்தியையும் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதும், இளநீர் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவதும் இதன் முதன்மை நோக்கங்களாகும். இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 75 கிராமங்களும், 2027 ஆம் ஆண்டில் 80 கிராமங்களும், 2028 ஆம் ஆண்டில் […]
நான் விரைவில் கைது செய்யப்படலாம் – நாமல் ராஜபக்ஷ!

நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் […]
நீர்த்தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (01) ஆம் திகதி காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் […]
பல்கலைக்கழக பிரச்சனைகள்; விரிவுரையாளர்கள் போராட்டம்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு தவறியுள்ளதன் காரணமாக இன்று போராட்டம் ஒன்றை நடத்த தயார் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது. இன்று (02) மதிய உணவு வேளையின் போது அனைத்து அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வு காணத் தவறினால், வரும் வாரத்தில் இப்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]
22ஆவது திருத்தச் சட்டமூலம்: மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை இன்று(02) வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய தினம் மனுதாரர் தரப்பின் வாதங்கள் இரவு 10.30 மணியளவில் நிறைவடைந்ததுடன், மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இன்று மனுதாரர் தரப்பின் மேலதிக வாதங்கள், இடை மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபரின் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: வரவு ரூ.54.91 கோடி, செலவு ரூ.319.50 கோடி – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிவந்த விவரங்கள்!

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலமாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அளித்துள்ள பதிலில், கடந்த சில ஆண்டுகளில் தேர்வுக் கட்டணம் மூலமான வருவாய் மற்றும் தேர்வு நடத்துவதற்கான செலவின விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆர்.டி.ஐ. தரவுகளின் முக்கிய அம்சங்கள்: தேர்வுக் கட்டண வருவாய்: கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில், TNPSC நடத்திய தேர்வுகள் மூலம் மொத்தம் ரூ.54 கோடியே 91 லட்சத்து […]
திருக்கோயில்களில் செல்போன் தடை: இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் செல்போன் தடை இன்று (செப். 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். தடைக்கான முக்கியக் காரணங்கள்: திருக்கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் அமைதியான வழிபாட்டுச் சூழலைப் பாதுகாக்கவும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி இறைவனைத் தரிசிக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற […]
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா வழக்கு: தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்துச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய வாதங்கள் மற்றும் விவரங்கள்: மனுதாரர்கள் தரப்பு வாதம்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர்.ராஜகோபால், “ராஜினாமா கடிதம் அளித்த சில நிமிடங்களிலேயே அமைச்சரைச் சந்தித்துத் தவெகவில் இணைந்தனர். ஆனால், […]
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மற்றும் பில் வழங்காமல் இருப்பது தொடர்பான வழக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் முக்கிய விவரங்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள்: வழக்கின் பின்னணி: சென்னையைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், அதுகுறித்து […]