தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை

உணவு தயாரிப்பின் போதும், உட்கொள்ளும் போதும் தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான, நீண்டகாலமாக பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான நோய்த்தாக்கங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் […]

யாழ்.கலாசார மத்திய நிலையத்தின் நோக்கத்தை இழக்க முடியாது

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் அதன் கட்டுமானத்தின் நோக்குடனும் மிடுக்குடனும் இருக்க வேண்டுமே தவிர கால ஓட்டத்துக்கு ஏற்ப பெயர் மாற்றங்களை திணிப்பதும் நோக்கங்களை மாற்றுவதுமாக இருக்க கூடாது என யாழ்.மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம்(11.06.2026) முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலாசார மத்திய நிலையத்தின் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட போது இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில், அத்துடன் யாழ்ப்பாணத்தின் அடையாளமாகவும் தமிழ் மக்களின் […]

ஆசிரியர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுக் கோரி வவுனியாவில் கையெழுத்து போராட்டம்

ஆசிரியர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஆசிரியர்களால் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, நேற்று(10.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலை நிறைவின் பின்னர் பிரதான வாயிலுக்கு வந்த ஆசிரியர்கள் கையெழுத்து வைக்கும் போராட்டத்தினை மேற்கொண்டிருந்ததோடு, தனது கோரிக்கையை நிறைவேற்றுமாறும் தெரிவித்துள்ளனர். இதேவேளை வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கையெழுத்து வாங்கும் செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தவெக அரசு; சிங்கப்பெண் தொடக்கவிழாவா? இல்லை ஆடியோ லான்ச் விழாவா?” – முதலமைச்சர் விஜயை அசுர வேகத்தில் வறுத்தெடுத்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!

தூத்துக்குடி: “முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘பிங்க் பேட்ரோல்’ திட்டத்திற்குத் தற்பொழுது ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ எனப் பெயர் மாற்றி, வெறும் ஸ்டிக்கர் ஒட்டித் தான் தவெக அரசு அரசியல் செய்கிறது; சொந்தக் கட்சிக்காரர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கே நீதி வழங்காத முதலமைச்சர் விஜய், ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களுக்கு எப்படிக் கொட்டமடித்து நீதி வழங்கப் போகிறார்?” என்று முன்னாள் திமுக அமைச்சர் கீதா ஜீவன் உக்கிரம் நிறைந்த மாஸ் சரமாரி கேள்விகளை அசுர வேகத்தில் அதிரடியாக எழுப்பியுள்ளார். […]

“சிங்கப்பெண் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? எம்.எல்.ஏ-வை கைது செய்ய முதல்வருக்குத் தெம்பு, திராணி இருக்கிறதா?” – முதலமைச்சர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை: “சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கிச் சமரசம் பேச முயன்ற உங்களது தவெக எம்.எல்.ஏ-வை ராஜினாமா செய்ய வைத்துக் கைது செய்ய இன்றைய முதலமைச்சர் விஜய்க்குத் தெம்பு, திராணி இருக்கிறதா?” என்று ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரத்தைக் கையில் எடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உக்கிரம் நிறைந்த மாஸ் கேள்விகளை அசுர வேகத்தில் அதிரடியாக எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) தனது அதிகாரப்பூர்வ […]

“சிங்கப்பெண் படை என்ன ரீல்ஸ் எடுக்கவா?” – ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகளின் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: “பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சர் விஜய்க்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா? சிங்கப்பெண் படை என்ன ரீல்ஸ் எடுக்கத் தான் உருவாக்கப்பட்டதா?” என்று ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளால் அரங்கேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை விவகாரத்தைக் கையில் எடுத்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உக்கிரம் நிறைந்த சரமாரி கேள்விகளை அசுர வேகத்தில் அதிரடியாக எழுப்பியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில், ஆளும் தவெக அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடி […]

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு; இன்றோடு மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 341 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 2 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 9 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 227 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

குருந்தூர்மலையில் சைவ கோவில் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை என தொல்லியல் திணைக்களம் புத்தசாசன அமைச்சின் செயலாளருக்குதெரிவிப்பு

குருந்தூர்மலையில் சைவ கோவில் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை என தொல்லியல் திணைக்களம் புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றதுஅதாவது அங்குள்ள ஆதி ஐயனார் கோவிலை சிதைத்து சட்டவிரோதமாக நீதிமன்ற உத்தரவுகளை மீறி குருந்தி ராஜமஹா விகாரை கட்டப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அங்கு சைவ கோவில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தொல்லியல் திணைக்களம் எழுத்தில் சொல்லியிருக்கின்றதுஅதே போல குறித்த நிலப்பரப்பானது வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த தலத்திற்கான சான்றுகளைக் கொண்ட இடம் எனவும் […]

வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை’: டொராண்டோவில் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரங்கல்கள் குவிகின்றன

டொராண்டோ காவல்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அமெரிக்க தூதரகத்தில் (U.S. Consulate) நடந்த துப்பாக்கிச் சூடு உட்பட பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய சோதனை ஆணை (search warrant) ஒன்றைச் செயல்படுத்த, காவல்துறை அதிகாரி மார்க் பினிசோட்டோ (Marc Pinizzotto) மற்றும் அவசரக்கால பணிக்குழுவின் (ETF) உறுப்பினர்கள் சென்றிருந்த போதே அவர் சுடப்பட்டதாகக் காவல்துறை அதிபர் மைரன் டெம்கிவ் தெரிவித்துள்ளார். பிளாக் கிரீக் மற்றும் […]

கே.பி.யிடம் (KP) கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பான ஊழல் விசாரணை: பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வாக்குமூலம்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான இலங்கை ஆணைக்குழு (Bribery or Corruption Commission), குமரன் பத்மநாதன் (கே.பி. என பரவலாக அறியப்படுபவர்) கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான தங்கம் என்னவானது என்பது குறித்து உயர்மட்ட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (11) ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி இது தொடர்பான சாட்சியங்களை வழங்கியுள்ளார். குமரன் பத்மநாதன், , […]