AI மூலம் அனர்த்தங்களை கணிக்க புதிய திட்டம்

இலங்கையின் அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம், அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்குடன் “GeoAI for Disaster Resilience” என்ற தேசிய முயற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்,தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஏ. ஹொவெல் (Ms. Jayne A. Howell), இந்த முயற்சியின் மாபெரும் ஆற்றலை வலியுறுத்தினார்.

அவர் குறிப்பிடுகையில், “புதுமைகளைத் தழுவி, மனித வளத்தில் முதலீடு செய்து, GeoAI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அபாயத்தை ஆயத்தமாக மாற்றுவதன் மூலம் அனர்த்த தாங்கும் திறனில் பிராந்தியத்தில் தலைமை தாங்கும் வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது.

அனர்த்தங்களை கணிக்க AI மூலம் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் | Geoai For Disaster Resilience Sri Lanka Government

அமெரிக்க புத்தாக்கமும் இலங்கைத் தலைமையுடன் இணைந்து அனைவருக்கும் பாதுகாப்பான, அதிக மீள்திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்க இந்த முயற்சி பிரதிபலிக்கிறது,” என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, “அனர்த்த தாங்கும் திறனும் டிஜிட்டல் பொருளாதாரமும் இனி தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் அல்ல.

செயற்கை நுண்ணறிவு, தரவு நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு ஆகியவை இப்போது மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் மையமாக உள்ளன,” என்று வலியுறுத்தினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னாள் மாணவர்களான கலாநிதி நோவில் விஜேசேகர (Dr. Novil Wijesekara) மற்றும் கலாநிதி அஸ்லாம் சஜா (Dr. Aslam Saja) ஆகியோரால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த முன்முயற்சியானது, அமெரிக்கத் தூதரகத்தின் ஆதரவுடனும் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கையின் அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

kethe

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான நிவாரணம்

December 16, 2025

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாந்தை

cens

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4% வளர்ச்சி!

December 16, 2025

2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5.4

hath

மீண்டும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக வழக்கு

December 16, 2025

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக மீண்டும் வழக்குத்

na

நாட்டில் இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்தத் தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறை

December 16, 2025

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (15) மீண்டும் கூடியது. ‘டித்வா’ புயலினால்

spr

மூடப்பட்ட ஸ்பிரிங்வெளி வைத்தியசாலை

December 16, 2025

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த

Education

640 பாடசாலைகள் இன்று இயங்காது

December 16, 2025

ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் இன்று (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர்

ma

புன்னைச்சோலையில் நிவாரணம் வழங்கவும் கிராம உத்தியோகத்தரை இடமாற்றவும் கோரிப் போராட்டம்!

December 16, 2025

மட்டக்களப்பு, புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், கிராம உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரியும் பொதுமக்கள்

war

தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை

December 16, 2025

கண்டி மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) சிவப்பு மண்சரிவு

World ba

உலக வங்கியால் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு!

December 16, 2025

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக வங்கி, பல மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. நடைமுறை திட்டங்களிலிருந்து நிதியை மறுபயன்பாடு செய்வதன்

Nagamu_1

இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி – சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

December 16, 2025

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ.

vudl

அசோக்க ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை?

December 16, 2025

சபுகஸ்கந்த பகுதியில் கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தி 6 மாதப் பச்சிளம் குழந்தை உட்பட 3 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில்

Prabath

சேதமடைந்த புகையிரத வீதிகளைப் புனரமைப்பதற்கு 400 மில்லியன்

December 16, 2025

மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பவற்றால் சேதமடைந்த புகையிரத வீதிகளை புனரமைப்பதற்கு 400 மில்லியன் டொலர் செலவாகக் கூடும் என அத்தியாவசிய