AI மூலம் அனர்த்தங்களை கணிக்க புதிய திட்டம்

இலங்கையின் அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம், அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்குடன் “GeoAI for Disaster Resilience” என்ற தேசிய முயற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்,தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஏ. ஹொவெல் (Ms. Jayne A. Howell), இந்த முயற்சியின் மாபெரும் ஆற்றலை வலியுறுத்தினார்.

அவர் குறிப்பிடுகையில், “புதுமைகளைத் தழுவி, மனித வளத்தில் முதலீடு செய்து, GeoAI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அபாயத்தை ஆயத்தமாக மாற்றுவதன் மூலம் அனர்த்த தாங்கும் திறனில் பிராந்தியத்தில் தலைமை தாங்கும் வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது.

அனர்த்தங்களை கணிக்க AI மூலம் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் | Geoai For Disaster Resilience Sri Lanka Government

அமெரிக்க புத்தாக்கமும் இலங்கைத் தலைமையுடன் இணைந்து அனைவருக்கும் பாதுகாப்பான, அதிக மீள்திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்க இந்த முயற்சி பிரதிபலிக்கிறது,” என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, “அனர்த்த தாங்கும் திறனும் டிஜிட்டல் பொருளாதாரமும் இனி தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் அல்ல.

செயற்கை நுண்ணறிவு, தரவு நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு ஆகியவை இப்போது மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் மையமாக உள்ளன,” என்று வலியுறுத்தினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னாள் மாணவர்களான கலாநிதி நோவில் விஜேசேகர (Dr. Novil Wijesekara) மற்றும் கலாநிதி அஸ்லாம் சஜா (Dr. Aslam Saja) ஆகியோரால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த முன்முயற்சியானது, அமெரிக்கத் தூதரகத்தின் ஆதரவுடனும் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கையின் அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

arr

கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைத் தாக்கியவர் கைது

December 15, 2025

கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர்

Baby death

பீப்பாயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

December 15, 2025

கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையொன்று, அரைவாசி நீர் நிரப்பப்பட்டிருந்த பீப்பாய் (Barrel) ஒன்றிற்குள் விழுந்து துரதிர்ஷ்டவசமாக

bre

பிரேசிலில் முன்னாள் அதிபருக்கு ஆதரவான மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

December 15, 2025

முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசிலில் பொதுமக்கள் போராட்டத்தில்

mora

மொராக்கோவில் கனமழை; 21 பேர் உயிரிழப்பு

December 15, 2025

மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக மழையின்

rob

ஹாலிவுட் இயக்குநரும் அவரது மனைவியும் கொலை!

December 15, 2025

லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில்

thai

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் துப்பாக்கி சூடு

December 15, 2025

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே

den

டெங்கு பரவல் கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம்

December 15, 2025

டெங்கு பரவல் கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போர் எவராக

neth

மண்சரிவில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

December 15, 2025

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மதியம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவ, தென்னவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்

mu

மியூனிச் – மைன்ஸ் போட்டி சமநிலை!

December 15, 2025

ஜேர்மனிய தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மைன்ஸுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

gell

நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளது!

December 15, 2025

மேற்கத்தேய பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ma

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

December 15, 2025

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக

ju2

ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

December 15, 2025

ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகனின் பல்கலைக்கழக விண்ணப்பத்தை ஏற்க மறுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து தாக்கல்