மனிதநேய உணர்வை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே பண்பாடான மனிதர் – பிரதமர் ஹரிணி

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது ஒரு சிறு பிள்ளை, நிர்க்கதியான ஒருவர் அல்லது பெண் ஒருவரை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் சில கருத்துக்களைப் பார்க்கும்போது, பண்பாடான மனிதனின் தேவையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்பாடான மனிதர் என்பவர் புத்தகங்கள் மற்றும் நூல்களிலிருந்து அறிவை மட்டுமே பெற்றவரோ அல்லது மனப்பாடம் செய்தவற்றை முன்வைப்பவரோ அல்ல என்றும், இலக்கியப் படைப்புகளின் ஊடாகத் தனது உள்ளார்ந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, மனிதநேய உணர்வை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே பண்பாடான மனிதர் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ‘கம்பஹா இலக்கிய விழாவில்’ (GAMLIT 26) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அத்தகைய மாற்றத்தையும் உணர்வுபூர்வமான தன்மையையும் கொண்ட பண்பாடான மனிதரால் வேறு எந்தவொரு நபருக்கும் அவமதிப்போ, மனவேதனையோ அல்லது அவமரியாதையோ ஏற்படாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இலக்கிய விழா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கலை, இலக்கியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் ஊடாக பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியின் காட்சிக் கூடங்களைப் பார்வையிடுவதில் பிரதமர் விசேட ஆர்வம் காட்டினார்.

இதன்போது, அத்துறைகளில் காணப்படும் புதிய போக்குகள் தொடர்பாக மாணவர்கள் முன்வைத்த விளக்கங்களைக் கேட்டறிந்ததுடன், அவர்களுடன் நட்புறவுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார். அத்துடன், மாணவர்களின் திறமைகளையும் அதற்காக அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

பின்னர், பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், கண்காட்சியில் பங்கேற்ற பாடசாலைகளுக்கும் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, இலக்கிய விழாவில் உரையாற்றிய பிரதமர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு மாநகர சபையினால் இவ்வாறான இலக்கிய விழாவொன்று ஏற்பாடு செய்யப்படுவது முழு நாட்டிற்கும் ஓர் எடுத்துக்காட்டாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த விழாவின் ‘பண்பாடான பிரஜையொருவரை கண்டடைதல்’ என்ற கருப்பொருள் மிகவும் காலத்திற்கேற்றதாக இருப்பதுடன், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திலும் பண்பாடான மனிதனை உருவாக்கும் நோக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இணையாக, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மனிதனை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதனை தேசிய மட்டத்திலான ஒரு நிகழ்ச்சித் திட்டமாக விரிவுபடுத்த முடியும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை