சிவகாசி
சிவகாசியில் நடைபெற்ற த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்குக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் கீர்த்தனா தனது உரையில் தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
துபாய்க்குத் தப்பியோடும் தலைவர்கள்:
-
“தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். என் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக மற்றும் அதிமுகவினர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்; அதைப் பற்றி தவெக கவலைப்படாது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம்.”
-
“முதலமைச்சர் விஜய்யின் மேஜையில் உள்ள வெறும் 3 கோப்புகளைத் திறந்து பார்த்தாலே போதும்; யார் யார் துபாய்க்குச் சென்று தலைமறைவாகப் போகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும்.”
சட்டமன்ற நேரலை பயம்:
-
“தொலைக்காட்சிகளில் மக்கள் சீரியல் பார்த்த காலம்போய், தற்போது சட்டமன்ற நேரலையைத்தான் ஆர்வமுடன் பார்க்கின்றனர். மக்களுக்காக நாம் என்ன செய்கிறோம், எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நேரலை ஒளிபரப்பப்படுகிறது.”
-
“சட்டசபையை நேரலையில் ஒளிபரப்பக்கூடாது எனச் சிலர் அழு அழுவென அழுகிறார்கள். 2021-ல் வாக்குறுதி அளித்த திமுக இதைச் செய்யவில்லை. நேரலையின் மூலம் தங்களின் முகத்திரை கிழிந்து கட்சி அழிந்துவிடுமோ என்ற பயம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.”
பெண்கள் மற்றும் உடைக் கட்டுப்பாடு மீதான விமர்சனம்:
-
“பெண்ணாக இருந்தால் அரசியலுக்கு வரக்கூடாதா? சரளமாக ஆங்கிலம் பேசக்கூடாதா? கோட்-சூட் அணியக்கூடாதா? சாதாரண மக்கள் கோட்-சூட் அணிந்து வளர்ந்தால் எதிர்க்கட்சிகள் ஏன் புலம்பித் தவிக்க வேண்டும்?” என்று அமைச்சர் கீர்த்தனா சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
#MinisterKeerthana #TNAssemblyLive #ChiefMinisterVijay #TVKGovernment #TVK100Days #SivakasiNews #DMK #AIADMK #WomenInPolitics #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates