தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலையில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 12 வயது சிறுமி சனிக்கிழமை (08) உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாக்குதலை நடத்தியவர் 14 வயதுடைய மாணவன் ஆவான்.
வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு வருவதற்கு முன்பாக, குறித்த மாணவன் தனது சொந்த தாத்தா மற்றும் பாட்டியைத் சுட்டுக் கொன்றுவிட்டுப் பாடசாலைக்கு வந்துள்ளான்.
பின்னர் பாடசாலையில் மேலும் 05 பேரைக் சுட்டுக் கொன்றதுடன், இறுதியில் தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக நோந்தாபுரி மாகாணத்தின் பிளாய் பாங் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதலில் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது மாணவியும் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.
இச்சம்பவம் தாய்லாந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.