கனடா 3,323 இந்தியா்களை நாடு கடத்தியது!

கனடா இதுவரை இல்லாத அளவாக கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்தியுள்ளது அந்த நாட்டின் எல்லைச் சேவைகள் முகமை (சி.பி.எஸ்.ஏ) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நுழைவு இசைவு (விசா) மோசடி, நுழைவு இசைவு காலாவதி உள்ளிட்ட குடியேற்ற விதிமீறல்கள் அடிப்படையில் இவா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அதிக எண்ணிக்கையாகும்.

அமெரிக்காவைப் போன்று கனடாவும் அண்மைக் காலமாக குடியேற்ற நடைமுறைகளைக் கடுமையாக்கி வருகிறது. வெளிநாட்டு மாணவா்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டு பணியாளா்கள் உள்ளிட்ட தற்காலிக குடியேற்றவாசிகளுக்கான அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை கனடா வெகுவாக குறைத்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நுழைவு இசைவு மோசடி, நுழைவு இசைவு காலாவதி உள்ளிட்ட குடியேற்ற விதிமீறல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டு, நாடு கடத்தும் நடவடிக்கையையும் கனடா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நாடு கடத்தல் உத்தரவின்படி, வெளிநாட்டினா் 30 நாள்களுக்குள் தாங்களாக கனடாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாவிடில், அவருக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவு, பொதுவாக ஒருவா் ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை கனடா திரும்புவதை தடை செய்யும். மேலும், கனடா அரசிடமிருந்து எழுத்துபூா்வ அனுமதி உத்தரவு பெறாதவரை, நாடு கடத்தப்பட்டவா் கனடாவுக்குள் நுழைய நிரந்தரமாகத் தடை செய்யவும் இந்த நாடு கடத்தல் உத்தரவு வழிவகுக்கும்.

நாடு கடத்தல் உத்தரவுப்படி, நிகழாண்டு முதல் பாதியில் (6 மாதங்களில்) கனடாவிலிருந்து அதிகபட்சமாக 3,323 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். கடந்த 2025-ஆம் ஆண்டில் 3,779 இந்தியா்கள், 2024-இல் 2,004 இந்தியா்கள், 2023-இல் 1,132 இந்தியா்கள், 2022-இல் 786 போ் மற்றும் 2021-இல் 603 இந்தியா்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனா்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக, கடந்த 6 மாதங்களில் மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்த 1,573 பேரை கனடா நாடு கடத்தியுள்ளது.

கனடாவில் நாடு கடத்தல் நடவடிக்கையில் உள்ளவா்களின் பட்டியலிலும் இந்தியா்களே (7,669) அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் சிபிஎஸ்ஏ தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுபோல, அமெரிக்காவிலிருந்து கடந்த ஜனவரி 1-ஆம் தேதிமுதல் ஜூலை 22-ஆம் தேதி வரை 1,273 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் சாா்பில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான