மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு மூதூர் படுகொலை உள்ளடங்கலாக முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஒரு சுயாதீன சட்டவாதியை நியமிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

போரின் தீவிரத்துக்கு உள்ளாகியிருந்த திருகோணமலைக்கு அருகில் அமைந்துள்ள மூதூர் நகரில் 2006ஆம் ஆண்டு ஒகஸ்ட் 4ஆம் திகதி 17 தன்னார்வ உதவிப் பணியாளர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வேளையில் நான் இலங்கையில் இருந்தேன். அன்றிலிருந்து நான் இச்சம்பவம் குறித்து எழுதி வருகிறேன். ஆனால் இப்படுகொலைகள் இடம்பெற்று 20 வருடங்கள் கடந்த பின்னரும், இதற்குப் பொறுப்பானவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2006ஆம் ஆண்டு மோதல் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில், ஒகஸ்ட் 2ஆம் திகதி விடுதலைப்புலிகள் மூதூரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அவ்வேளையில் பாரிஸ் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கிவந்த சர்வதேச தொண்டு நிறுவனமான ‘அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ அமைப்பைச் சேர்ந்த, இலங்கையில் பணியாற்றிவந்த தன்னார்வ உதவிப் பணியாளர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் அவர்களது அலுவலக வளாகத்துக்குள் முடங்கியிருந்தனர்.

அதனையடுத்து ஒகஸ்ட் 4ஆம் திகதி நண்பகல் விடுதலைப்புலிகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்புப் படையினர் மீண்டும் அந்நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், தாம் மிகப் பயங்கரமான ஒரு உண்மையைக் கண்டறிந்ததாக அறிவித்தனர்.

அதன்படி அத்தொண்டு நிறுவன அலுவலக வளாகத்துக்குள் 15 தன்னார்வப் பணியாளர்களின் உடல்கள் தலையிலும் கழுத்திலும் மிக அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காயங்களுடன் கண்டறியப்பட்டன. அதுமாத்திரமன்றி தப்பிச் செல்ல முயன்றதாகத் தோன்றக்கூடிய மேலும் இரு பணியாளர்களின் உடல்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்திலிருந்து கண்டறியப்பட்டன.

அச்சம்பவ இடத்தைப் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் ஒரு முஸ்லிம் நபரைத் தவிர ஏனைய அனைவரும் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் (13 ஆண்கள், 4 பெண்கள்) தமிழர்கள் என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்தது.

இருப்பினும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஊடாக இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட தகவல்கள் பொய்யானவை எனக் கண்டறியப்பட்டது. அதுமாத்திரமன்றி இந்தப் படுகொலைகளுக்கு இரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இலங்கை கடற்படையின் விசேட பிரிவினருமே பொறுப்பாளிகள் என்றும், பொலிஸ் மற்றும் நீதித்துறை உயரதிகாரிகள் இதனை மறைப்பதற்கு முற்பட்டதாகவும் அவ்வமைப்பு கண்டறிந்தது.

2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 26 ஆண்டுகால உள்நாட்டுப்போரின்போது இருதரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான குற்றங்களில் மூதூர் படுகொலையும் ஒன்றாகும். அதுமாத்திரமன்றி அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்த போதிலும், அதுசார்ந்த தன்முனைப்புடன் செயற்படாத முக்கிய 12 மனித உரிமை வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். எனினும் மூதூர் படுகொலையில் கொல்லப்பட்ட தன்னார்வப் பணியாளர்களின் குடும்பத்தினரும், மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட மேலும் பல்லாயிரக்கணக்கானோரின் உறவுகளும் பல ஆண்டுகள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்.

மூதூர் படுகொலை உள்ளடங்கலாக முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஒரு சுயாதீன சட்டவாதியை நியமிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.

அத்தோடு யுத்தகால வன்முறைகள் மற்றும் அதன் பின்னரான மீறல்களால் பாதிக்கப்பட்ட சகலருக்குமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நாடுகள் இலங்கை மீது தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

jud

மருத்துவமனைக்கு அபராதம்

July 29, 2026

அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பை மீறி இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு வவுனியா நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய்

f

தனியார்மயமாகிறது FIFA உலகக் கோப்பை?

July 29, 2026

ஃபிபா (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ, உலகக் கோப்பைப் போட்டிகளில் கணிசமான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு வழிவகை செய்யும்

an

மனிதாபிமான அடிப்படையில் சிவராசா அனோஜனை விடுவிக்குமாறு கோரிக்கை

July 29, 2026

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த

hum

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

July 29, 2026

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,

Accident

திருக்கோவிலில் விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு!

July 29, 2026

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள் உட்பட

us

அமெரிக்காவும், சவூதியும் இணைந்து ஈராக்கில் தாக்குதல்

July 29, 2026

மத்திய கிழக்கு மோதலின் ஒரு சாத்தியமான தீவிர போக்காக, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய குழுக்கள் மீது

toro poli

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் குழந்தைகளைக் கவர முயன்ற 57 வயது தொராண்டோ நபர் – குற்றச்சாட்டுகள்

July 29, 2026

Snapchat, TikTok மற்றும் Fortnite ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் உள்ள குறைந்தபட்சம் 15

WILD FIRE

வடக்கு ஒன்ராறியோவில் காட்டுத் தீயை மூட்டிய கியூபெக் நபர் மீது குற்றச்சாட்டு

July 29, 2026

வடக்கு ஒன்ராறியோ சமூகமான ஹுரோன் ஷோர்ஸில் (Huron Shores) இந்த வாரம் இடம்பெற்ற தொடர்ச்சியான காட்டுத் தீ விபத்துகள் குறித்து

HNEVLLPEGBEWHABKFIAESZOSVM

மொன்றியல் விமான நிலையத்தில் வண்ணம் பூசியதால் ஏற்பட்ட துர்நாற்றம்: அமெரிக்காவிற்கான விமானங்கள் ரத்து

July 29, 2026

மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (Montréal-Pierre Elliott Trudeau International Airport) செய்யப்பட்ட “உட்புற வண்ணம் பூசும்

8

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்: மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!

July 29, 2026

கன்னியாகுமரி: கேரளாவுக்குத் தடையை மீறி கனிம வளங்களைக் கொண்டு செல்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும், அந்த

EEZ4KO6XDFDSLL4MIMTCNZKYBM

17 ஆண்டுகளுக்கு முன்பு மகன்களைக் கடத்தி போலந்துக்குத் தப்பிச் சென்ற நியூமார்க்கெட் பெண் விசாரணையை எதிர்கொள்கிறா

July 29, 2026

17 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுவயது மகன்களை அவர்களின் தந்தையிடமிருந்து கடத்தி போலந்துக்கு அழைத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நியூமார்க்கெட்

7

சென்னை மெட்ரோ பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய் – பொதுமக்களுடன் ரயிலில் பயணம்!

July 29, 2026

சென்னை: தலைநகர் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்