இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சருக்கு கடிதம்!

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இதன்மூலம், எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்னர், இந்த முன்மொழிவை முழுமையாக ஆராய்ந்து விடயப்பரப்பு சார்ந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் நோக்கில் பொருத்தமான குழுவொன்றை நியமிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அரசாங்கம் கொண்டுவரத் தயாராகி வருவதாகக் கூறப்படும் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவு குறித்து தற்போது சமூகத்தில் பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதவான்கள், மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச்சேவை சங்கத்தின் 65 நீதிபதிகள் இந்த முன்மொழிவுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

மேற்கோள்:

“எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்னர், இந்த முன்மொழிவை முழுமையாக ஆராய்ந்து விடயப்பரப்பு சார்ந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் நோக்கில் பொருத்தமான குழுவொன்றை நியமிக்குமாறு நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமைச்சு, நீதித்துறை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொருத்தமானதாகக் கருதப்படும் ஏனைய பங்குதாரர்களை உள்ளடக்கியதாக அக்குழு அமைய வேண்டும்.

இவ்விடயங்கள் குறித்து முழுமையாகக் கலந்துரையாடுவதற்கு உங்களுக்கு வசதியான மிக விரைவான நேரத்தில் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறும் மேலும் கேட்டுக்கொள்கிறோம்.

நீதி நிர்வாகத் துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனைகள் நடத்தப்படும் வரை, இந்த முன்மொழிவு தொடர்பாக எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்.”

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட