ஆயுதங்கள் அகற்றப்பட்டதாக கூறப்பட்ட பின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? – ஆனந்த பாலித

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலையிலிருந்த அனைத்து ஆயுதங்களும் 5ஆம் திகதி இரவே அகற்றப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்த பின்னணியில், ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்றும், அதிகாரிகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை, அரசாங்கத்தின் முறையான தலையீடு இன்மையால் பெரும் மனிதப் பேரவலமாக மாறியுள்ளது. 5ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டபோதிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால், 6ஆம் திகதி நிலைமை விபரீதமாகி சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, 5ஆம் திகதி இரவே சிறைச்சாலையில் இருந்த அனைத்து ஆயுதங்களும் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால், அமைச்சர்கள் ஊடகங்களை அச்சுறுத்தி வரும் தற்போதைய சூழலில், சிறைச்சாலையின் ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தின. ஆயுதங்கள் அகற்றப்பட்ட பின் ஜன்னல் வழியாகச் சுட்டது யார்? என்ற கேள்வி தற்போது எழுகிறது.

இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த சிறைச்சாலைகளிலும் கைதிகளின் எண்ணிக்கை 41,000ஐத் தாண்டியுள்ளது. அதற்கமைய, 625 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய நீர்கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம் நிகழ்ந்த வேளையில் 2,426 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு கைதிகள் இருக்கும் ஒரு சூழலில், சிறைச்சாலையைக் கண்காணிக்கவேண்டிய பாதுகாப்பு ஊழியர்களில் 140 அதிகாரிகள் பற்றாக்குறை நிலவியுள்ளது.

5ஆம் திகதி இரவே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டதே தவிர, இராணுவம் மற்றும் பொலிஸாரை கொண்டு முறையான பாதுகாப்புப் பலப்படுத்தல் செய்யப்படவில்லை. இதனால் 6ஆம் திகதி நடந்த படுகொலைகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது.

இந்த மோதல் சம்பவம் நாகரிகமற்றது என்றாலும், இதன் மூலம் சிறைச்சாலையின் நெருக்கடி குறையும் என அமைச்சர் லால் காந்த முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

மனித உயிர்கள் பலியானதை இடநெருக்கடி குறைவதற்கான வழியாகக் கூறும் அமைச்சரின் கருத்து, அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாட்டையே காட்டுவதுடன், அரசாங்கத்தின் மிக மோசமான மற்றும் பொறுப்பற்ற செயலாகும்.

தற்போதைய அரசாங்கம் நாட்டில் உள்ள விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களிடையே திட்டமிட்டு பிரிவினையையும், மோதல்களையும் உருவாக்கி, உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்க முயல்கின்றனர். அமைச்சர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும் வருகின்றனர். ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகளால் ஒட்டுமொத்த பொதுமக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் பாரியளவில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வெறும் பாராளுமன்றத்துக்குள் மட்டும் முடங்கிக் கிடக்காமல், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை பேரவைகளை நாடி அரசாங்கத்தின் முகத்திரையை வெளிக்கொண்டு வருவதற்கு ஒன்றிணைய வேண்டும் என்றார்.

XHMNWD52XI3N4U6HGGF7TXXYIY

சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

July 28, 2026

சிறுமி ஒருவருக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் (Sherwood Park) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது

757979515_893153420517649_5715581353310024185_n

ஒன்டாரியோ வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: 19 பேர் கைது, $97 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

July 28, 2026

ஒன்டாரியோவின் மிகப்பெரிய போதைப்பொருள் புலனாய்வு நடவடிக்கைகளில் ஒன்றை அடுத்து, கனடிய அதிகாரிகள் 19 பேரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், தெருக்களில்

CANADA PASSPORT

போலி கனடிய பாஸ்போர்ட் இணையதளத்தை நடத்திய யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு: பொலிஸார் தகவல்

July 28, 2026

னடிய அரசாங்கத்துடன் தொடர்புடையது போல் காட்டி, “ஏமாற்றும்” வகையில் கடவுச்சீட்டு (Passport) இணையதளத்தை நடத்தியதாகக் கூறப்படும் யோர்க் பிராந்தியத்தைச் (York

7JFWSDPFKFG4ZDWVNCBNCHIKCY

வோட்டர்லூவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கடை மேலாளர் காயம் – பொலிஸார் தெரிவிப்பு

July 28, 2026

திங்கட்கிழமை இரவோடு இரவாக வோட்டர்லூவில் (Waterloo) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கடை மேலாளர் ஒருவர் காயமடைந்தமை குறித்து வோட்டர்லூ பிராந்திய

POLICE CANADA 111

ஹால்டன் பொலிஸார் தமது வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் முடிவுகளை வெளியிடவுள்ளனர்

July 28, 2026

ஹால்டன் பிராந்திய பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் (Human trafficking) விசாரணை தொடர்பான முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

5XSONJLBFZCXDNCH5UVBLEETRQ

1.7 மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரட்டிப்பாகியுள்ளன. அதற்கான காரணம் குறித்து காவல்துறை கூறுவது இதோ.

July 28, 2026

கனடாவின் குற்றக் தீவிரக் குறியீடு (Crime severity index) குறைந்துள்ளதாகவும், தீவிரக் குற்றங்களின் எண்ணிக்கை குறைவதே ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணம்

7

எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்ட பதில்!

July 28, 2026

சென்னை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை

6

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க வேண்டாம்! – வைகோ கோரிக்கை!

July 28, 2026

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள தமது புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்