இலங்கை: மோதல்களைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் மரணங்கள் குறித்து அவசரமாக விசாரிக்கப்பட வேண்டும்-சர்வதேச மன்னிப்புச் சபை

குறைந்தது ஏழு சிறை அதிகாரிகள் உட்பட 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான வன்முறையைத் தொடர்ந்து, நீர்கொழும்பு (Negombo) சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் பாபு ராம் பந்த் (Babu Ram Pant) பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“இந்த மரணங்கள் குறித்து வெளியாகும் அறிக்கைகளும், நீர்கொழும்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஏனைய கைதிகள் மீதான சித்திரவதைகள் மற்றும் பிற மோசமான நடத்தைகள் குறித்த குற்றச்சாட்டுகளும் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இந்த கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. அனைத்து மரணங்கள் நிகழ்ந்த விபரங்கள் குறித்தும் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுடன், கைதிகளின் நல்வாழ்வைச் சரிபார்ப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு (HRCSL) முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும். சட்டத்தரணிகள் காவலில் உள்ள தங்களது கட்சிக்காரர்களைச் சந்திப்பதும், குடும்ப உறுப்பினர்கள் தங்களது அன்புக்குரியவர்களைப் பார்ப்பதும் மிக முக்கியமானதாகும். மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் எவருக்கும் தாமதமின்றி அது வழங்கப்பட வேண்டும்.”

“இந்த கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.” — பாபு ராம் பந்த், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர்

“நீர்கொழும்பில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விசாரணை பாரபட்சமற்றதாகவும், சுதந்திரமானதாகவும் மற்றும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் உயிரிழப்பை ஏற்படுத்திய பலப்பிரயோகத்திற்கு (use of force) வழிவகுத்த சூழ்நிலைகள் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த சோகமான நிகழ்வானது, இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் உள்ள நீண்டகாலப் பிரச்சினைகளை மீண்டும் ஒருமுறை கோடிட்டுக் காட்டுகிறது. கடந்த மாதம் மாத்திரம் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐநா துணைக் குழுவானது (UN Subcommittee on Prevention of Torture), நீண்டகாலமாக நீடிக்கும் விளக்கமறியல் (pretrial detention), அதிகளவிலான கைதிகள் நெரிசல் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள போதிய வசதியின்மை குறித்து மீண்டும் எச்சரித்திருந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய தங்களது விஜயத்திற்குப் பின்னர், நிலைமைகளில் எந்தவொரு அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையும் அவர்களின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நீண்டகாலமாக நிலவி வரும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அதிகாரிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது, சிறை வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதுடன், கைதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது.”

757979515_893153420517649_5715581353310024185_n

ஒன்டாரியோ வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: 19 பேர் கைது, $97 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

July 28, 2026

ஒன்டாரியோவின் மிகப்பெரிய போதைப்பொருள் புலனாய்வு நடவடிக்கைகளில் ஒன்றை அடுத்து, கனடிய அதிகாரிகள் 19 பேரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், தெருக்களில்

CANADA PASSPORT

போலி கனடிய பாஸ்போர்ட் இணையதளத்தை நடத்திய யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு: பொலிஸார் தகவல்

July 28, 2026

னடிய அரசாங்கத்துடன் தொடர்புடையது போல் காட்டி, “ஏமாற்றும்” வகையில் கடவுச்சீட்டு (Passport) இணையதளத்தை நடத்தியதாகக் கூறப்படும் யோர்க் பிராந்தியத்தைச் (York

7JFWSDPFKFG4ZDWVNCBNCHIKCY

வோட்டர்லூவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கடை மேலாளர் காயம் – பொலிஸார் தெரிவிப்பு

July 28, 2026

திங்கட்கிழமை இரவோடு இரவாக வோட்டர்லூவில் (Waterloo) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கடை மேலாளர் ஒருவர் காயமடைந்தமை குறித்து வோட்டர்லூ பிராந்திய

POLICE CANADA 111

ஹால்டன் பொலிஸார் தமது வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் முடிவுகளை வெளியிடவுள்ளனர்

July 28, 2026

ஹால்டன் பிராந்திய பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் (Human trafficking) விசாரணை தொடர்பான முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

5XSONJLBFZCXDNCH5UVBLEETRQ

1.7 மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரட்டிப்பாகியுள்ளன. அதற்கான காரணம் குறித்து காவல்துறை கூறுவது இதோ.

July 28, 2026

கனடாவின் குற்றக் தீவிரக் குறியீடு (Crime severity index) குறைந்துள்ளதாகவும், தீவிரக் குற்றங்களின் எண்ணிக்கை குறைவதே ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணம்

7

எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்ட பதில்!

July 28, 2026

சென்னை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை

6

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க வேண்டாம்! – வைகோ கோரிக்கை!

July 28, 2026

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள தமது புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்