சாவகச்சேரி உப – தவிசாளரை ஆளுநர் தனிநபர் விசாரணை குழுவின் விசாரணை தீர்மானத்திற்கு அமைய பதவி நீக்கியமை தொடர்பில் குறித்த உபத்தவிசாளர் அவர்களால் கலாநிதி குருபரன் ஊடாக அந்த தீர்மானத்தை இரத்து செய்யக் கூறியும் அந்த தீர்மானம் தொடர்பில் இடைக்கால தடை கட்டளை வழங்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரிய இடைக்கால தடை கட்டளையை வழங்க யாழ் நீதிமன்றம் இன்றைய தினம் (06.07.2026) மறுத்துள்ளது.
கலாநிதி குருபரன் அவர்களின் நீண்ட வாதத்தை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி சதீஸ்தரன் அவர்கள் எதிர் மனுதாரர்களுக்கு கட்டளை அனுப்ப இணங்கிய போதும் இடைக்கால தடைக்கட்டளை வழங்க மறுத்து தீர்ப்பளித்துள்ளார்.
இதனால் புதிய உப தவிசாளரை நியமிப்பதில் எந்த தடையும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை இஇதனை ஒத்த வழக்கு ஒன்றில் வவுனியா மேயருக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்மானத்தை கேள்விக்கு உட்படுத்தி ஜனாதிபதி சட்டதரணி சுமந்திரன் அவர்கள் இடைக்கால தடை உத்தரவை கடந்த வாரம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது